செய்தி சிறப்பம்சங்கள்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2025 செப்டம்பர் 07 ஆம் திகதி பனாகொடை ஸ்ரீ போதிராஜாராமய விகாரையில் பினர பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த மத நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார்.


2 வது விஷேட படையணியின் கடமையில் இல்லாது விடுமுறையில் இருந்த லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.எம்.வீ.எம் பண்டார, நேற்று மாலை (04) எல்ல-வெல்லவாய வீதியில் ராவணன் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட போதிலும், தனது துணிச்சலை வெளிப்படுத்தி மூவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.


நேற்று (04) இரவு 9.20 மணியளவில் தங்காலையில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, ராவணன் நீர்வீழ்ச்சியின் 15 வது மைல் கல் மவுண்ட் 07 ஹோட்டலுக்கு அருகில், எல்ல-வெல்லவாய வீதியை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் வீழ்ந்த ஒரு துயர விபத்து ஏற்பட்டது.


போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் ஏற்பாட்டில் கலை மற்றும் இலக்கியப் போட்டிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 செப்டெம்பர் 04 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திஸாநாயக்க அவர்களுடன் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2025 செப்டம்பர் 04 ஆம் திகதி ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தர்ம சொற்பொழிவில் கலந்துகொண்டார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 4 ஆம் திகதி 2 வது இலங்கை இராணுவ முன்னோடி படையணி மற்றும் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 செப்டம்பர் 01, அன்று மேஜர் ஜெனரல் ஆர்பீஎஸ் பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு மேஜர் ஜெனரல் நிலைக்கான அதிகார சின்னத்தினை வழங்கினார். நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர்.


இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய பாதுகாப்பு கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் மேஜர் ஜெனரல் பவன்பால் சிங் வீஎஸ்எம் எஸ்டிஎஸ் (இராணுவம்-II), 2025 செப்டம்பர் 01 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் உள்ள தளபதி அலுவலகத்தில் இலங்கை இராணுவத் தளபதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


புகழ்பெற்ற 400 மீட்டர் தேசிய சாம்பியனான இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணிநிலை சாஜன் ஆர். நதீஷா, ஜப்பான் டோக்கியோவில் 2025 செப்டம்பர் 13 முதல் 21 வரை நடைபெற உள்ள உலக தடகள சம்மேளனத்தின் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மதிப்புமிக்க உலகளாவிய போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இலங்கை பெண் தடகள வீராங்கனை இவர் ஆவார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில், இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலை 2025 ஆகஸ்ட் 29 ஆம் திகதி நிர்வாக உதவியாளர் பாடநெறி எண். 91 முதல் 95 வரை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு தேசிய தொழிற்கல்வித் தகுதி (NVQ) சான்றிதழ்களை வழங்கியது.