Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத் தளபதி

லெப்டினன் ஜெனரல் எச்எல்விஎம் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 24 வது தளபதியாக 01 ஜூன் 2022 அன்று நியமிக்கப்பட்டார். இவர் இராணுவத் தளபதியாக இருப்பதுடன், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகிக்கின்றார். இவர் இராணுவத்தின் 24 வது தளபதியாக பதவியேற்கும் முன்னர், இலங்கை இராணுவத்தின் பதவி நிலைப் பிரதானியாக பணியாற்றினார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, மாத்தளை விஜய கல்லூரியின் பெருமைக்குரிய பழைய மாணவராக தடகளம் மற்றும் ஹொக்கியில் சிறந்து விளங்கி பாடசாலைக்கு பெருமை சேர்த்தார். பாராட்டுக்களைப் பெற்றார். அவர் 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பாடநெறி- 26 இன் பயிலிளவல் அதிகாரியாக இணைந்து தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி, பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றார். இவர் பயிலிளவல் அதிகாரி பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன், இரண்டாம் லெப்டினன் நிலைக்கு அதிகாரவாணை வழங்கப்பட்டு 23 ஜூலை 1987 அன்று கஜபா படையணியில் நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக இராணுவத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட பின்னர், 01 ஜூன் 2022 லெப்டினன் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார்.

லெப்டினன் ஜெனரல்
எச்.எல்.வி.எம் லியனகே ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி என்டீயூ

அவரது புகழ்மிக்க 37 வருட இராணுவ சேவையில், பல கட்டளை பதவிகளை வகித்துள்ளார். அவற்றில் இலங்கை தொண்டர் படையணி தளபதி, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி 21 வது படைப்பிரிவு தளபதி, 215, 542, 224, 221 மற்றும் 623 வது பிரிகேட்களின் தளபதி, கொழும்பு நடவடிக்கை பிரிவின் தளபதி மற்றும் 225 மற்றும் 553 வது பிரிகேடுகளின் பதில் தளபதி ஆகிய பதவிகள் குறிப்பிடத்தக்கவை.

உளவியல் பணிப்பகத்தின் பணிப்பாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பணிப்பாளர் (கொள்கை மற்றும் பயிற்சி) மற்றும் பணிப்பாளர் (நடவடிக்கை மற்றும் ஒழுங்குபடுத்தல்), ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரி, கஜபா படையணி தலைமையகம் மற்றும் பணிநிலை கடமைகள் பணிப்பகம் ஆகியவற்றின் பணிநிலை அதிகார 2 மற்றும் அம்பாறை இராணுவ பயிற்சி பாடசாலை தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

ஒரு காலாட் படை அதிகாரியாக மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின் போது, 57 மற்றும் 56 வது படைப்பிரிவுகளின் கீழ் 8 வது கஜபா படையணியினது கட்டளை அதிகாரியாக நியமனம் வகித்த லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே வகித்த நியமனங்களின் போதான அனுபவங்களை கொண்டு இவர், அக்காலப்பகுதியில் விடுதலை புலிகளுடனான மோதல்களில் பல்வேறு பெரும் இலக்குகளை அடைய பங்களிப்பு வழங்கியுள்ளார்.

மேலும், இந்தோனேசியாவின் லெம்ஹன்னாஸ் பல்கலைக்கழகத்தில் மூலோபாய மற்றும் எதிர்த்தல் ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும், ஹவாயில் உள்ள பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய-பசிபிக் மையத்தில் இளங்கலைப் பட்டமும், இந்தியாவின் இந்தூர் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு முகாமைத்துவ டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார். இந்தியாவில் அதிகாரிகளுக்கான உடற் பயிற்சி பாடநெறி, பாகிஸ்தானில் இளம் அதிகாரிகளுக்கான பாடநெறி, இந்தியாவில் இளம் கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி, பங்களாதேஷில் படையலகு கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி, இந்தியாவில் சிரேஷ்ட தளபதிகளுக்கான பாடநெறி உட்பட பல வெளிநாட்டு பாடநெறிகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் தொழில்முறை தகைமைக்கான கருத்தரங்குகள் ஆகியவற்றையும் நிறைவு செய்துள்ள அவர், ஹவாயில் உயர் பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம் தொடர்பிலான பாடநெறி, இந்தோனேசிய லெம்ஹன்னாஸில் தேசிய கல்வித் திட்டம் ஆகியவற்றையும் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதன்படி இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் (மாதுருஓயா) உள்ளகப் பாதுகாப்பு / புரட்சி எதிர் போர்ப் பாடநெறி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் வழிநடத்தல் தொடர்பிலான பாடநெறி, மின்னேரிய பீரங்கி பாடசாலை முன்னரங்க பராமரிப்பு தொடர்பிலான பாடநெறி, மின்னேரியா படையலகு உதவி ஆயுத பாடநெறி, மாதுரு ஓயா பாடசாலையி்ல் புத்தாக்கம் தொடர்பிலான பாடநெறி குடாஒய கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையில் ஏயர் போன் பாடநெறி என்பவற்றினை பயின்றுள்ளார்.

அதேநேரம் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் பெருமளவில் பங்களிப்புச் செய்த லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் போர்களத்தில் எதிர்களுக்கு எதிராக மேற்கொண்ட தனிப்பட்ட மற்றும் துணிச்சலான செயற்பாடுகளுக்காக ரண விக்கிரம பதக்கம் (RWP) பெற்றுள்ளதோடு, போர்களத்தில் எதிரிகளை முறியடிப்பதற்கு தன்னார்வத்துடன் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக ரண சூர பதக்கம் (RSP) பெற்றுள்ளார். மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒரு முன்னோடியாக திகழ்ந்த இந்த சிரேஷ்ட அதிகாரிக்கு மேற்குறித்த பதக்கங்கள் மூன்று தடவைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் எதிரிகளுடனனான மோதலுக்கு முகம்கொடுத்து காயமடைந்தன் காரணமாக தேசபுத்திர பதக்கத்தையும், மனிதாபிமான நடவடிக்கைகளின் போதான பங்களிப்புகளுக்காக கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூரண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம், ரிவிரெச போர் கள சேவை பதக்கம், 50 வது சுதந்திர தின நினைவு பதக்கம், இலங்கை இராணுவ சேவையின் 50 வது ஆண்டு நினைவு பதக்கம், 75 வது சுதந்திர தின நினைவு பதக்கம், நீண்டகால சேவைப் பதக்கம், சேவா அபிமானி பதக்கம் மற்றும் சேவை பதக்கம் ஆகியவற்றையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

அதேபோல் புத்த சாசனத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி அமரபுர பீடத்தினால் ஜனமான்ய விபூத்திரத்னா’ என்ற கௌரவ பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருமதி ஜானகி லியனகே அவர்களை மணம் முடித்துள்ள அவர் ஒரு மகள் மற்றும் ஒரு மகனினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தலைமையகத்தில் புத்தாக்க அணி கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி, இராணுவ புலனாய்வு படையணியில் படையலகு பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பாடநெறி, சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு தொடர்பிலான பாடநெறி என்பவற்றையும் பின்பற்றியுள்ள அவர், (UNHCR) ஐநா அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் அடிப்படை மருத்துவ செயற்பாடுகள் மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பிலான பாடநெறி மற்றும் 21 வது படைப்பிரிவின் பல்தேசிய படையலகு அப்பியாசம் -3 இலும் பங்குபற்றியுள்ளார்.