செய்தி சிறப்பம்சங்கள்

2025 ஆம் ஆண்டு பாதுகாப்பு உரையாடலில் பங்கேற்க தற்போது இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத்தின் பாதுகாப்புத் அமைச்சின் பணியாளர் கடமைகள் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் எம்பீ சிங் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜூன் 05 அன்று இராணுவத் தலைமையக தளபதி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன்...


இலங்கை இராணுவத்தில் இருந்து 35 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவபிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 ஜூன் 05, அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தார்.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 03, அன்று தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கு மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டார்.


“ஆரோக்கியமான தேசம் ஆரோக்கியமான இராணுவம்” என்ற தலைப்பில் 2025 ஜூன் 02, அன்று கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது, இதன்போது தொற்றா நோய்களைத் தடுப்பது மற்றும் முன்கூட்டியே கண்டறிவது தொடர்பாக கவனம் செலுதப்பட்டது.


புத்தள இராணுவ போர்க் கல்லூரியின் இரண்டாவது நிர்வாகக் குழு கூட்டம் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவரது புதிய நியமனத்தின் பின்னர் இராணுவ போர்க் கல்லூரிக்கான முதல் உத்தியோகப்பூர்வ விஜயம் இதுவாகும்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 02 ஆம் திகதி ரத்மலானை 4 வது (தொ) இலங்கை பொறியியல் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.


தென் கொரியாவின் குமியில் 2025 மே 27 முதல் 31 வரை நடைபெற்ற 26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் தமது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினர்.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், காயமடைந்த போர் வீரர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் நலன் மற்றும் நிருவாக விடயங்களை ஆராய்வதற்காக ஒருங்கிணைப்பு நிலையங்கள் 2025 மே 26 முதல் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு இராணுவ நிறுவனத்திலும் நிறுவப்பட்டன.


இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டி.ஏ. பீரிஸ் பிடிஎஸ்சீ, அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 மே 30 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.