செய்தி சிறப்பம்சங்கள்

இராணுவத் தலைமையகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட படையணி சார்ஜன் மேஜர் அதிகாரவாணையற்ற அதிகாரி I கே.ஜீ.எம். பிரியந்த ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஆகஸ்ட் 19 அன்று கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இந்தோனேசியக் குடியரசின் தூதரும் முழு அதிகாரம் பெற்றவருமான திருமதி தேவி குஸ்டினா அவர்கள் 2025 ஆகஸ்ட் 20 இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


2025 ஆகஸ்ட் 18 முதல் 20 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 2025 இராணுவ தடகள சாம்பியன்ஷிப்பில், இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் இன்று (ஆகஸ்ட் 19, 2025) கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீட்டர் மற்றும் 18 சென்டிமீட்டர் உயரம் தாண்டி புதிய இலங்கை சாதனையைப் படைத்தார்.


இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 18 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்திற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 18, அன்று கல்குடாவில் உள்ள லாயா வேவ்ஸ் இராணுவ விடுமுறை விடுதிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 18, அன்று பெலவத்தவில் உள்ள 1 வது இராணுவ முன்னோடி படையணிக்கு அதிகாரப்பூர்வ கள விஜயத்தை மேற்கொண்டார்.


இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் பாரிய அளவிலான புனரமைப்பு பணிகள் பிரதம கள பொறியியல் காரியாலயம் மற்றும் பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் 1 வது கள பொறியியல் படையணி மற்றும் 6 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 13 அன்று மாலை எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளைக்கு விஜயம் செய்துடன், அங்கு அவர் ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளையின் ஸ்தாபகர் வண. ஓமல்பே சோபித தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றார்.


இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கட்டளை அதிகாரிகள் மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சித் திட்டம் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் 2025 ஆகஸ்ட் 13 முதல் 14 வரை நடத்தப்பட்டது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், 2025 ஜூன் 14 அன்று புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மேஜர் ஜெனரல் அதிகார சின்னத்தை முறையாக வழங்கினார்.