செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி அவர்கள் 2025 ஜூலை 17 ஆம் திகதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களை இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூலை 16 அன்று தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பிங்கர் ஸ்விப்ட் 2025’ ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.


இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கான 'இராணுவத்திலிருந்து சிவில்' வாழ்வுக்கான முன்னேற்பாடு மற்றும் வலுவூட்டல் திட்டத்தின் விருது வழங்கும் விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.


2025 ஜூலை 14 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கான இராணுவத்திலிருந்து சிவில் வாழ்வுக்கு வலுவூட்டல் திட்டத்தின் ஆரம்ப விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.


இராணுவ சேவையில் உள்ள பணியாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கத்துடன், அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் 2025 ஜூலை 09 அன்று கஜபா படையணி தலைமையகத்தில் ஒரு நலன்புரி திட்டம் நடத்தப்பட்டது.


இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 09 அன்று கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.


ராஜங்கனை 5 வது (தொ) கஜபா படையணியின் பணிநிலை சாஜன்ட் டபிள்யூஎம்ஜீஎம் மங்கள அவர்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை, மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 2025 ஜூலை 09 ம் திகதியன்று கையளித்தார்.


லெப்டினன் கேணல் சுஜித் சமிந்த எதிரிசிங்க அவர்கள் எழுதிய ‘அவசன் சடனே மியகிய அவசன் செபலா’ (இறுதிப் போரில் வீழ்ந்த இறுதி சிப்பாய்) புத்தக வெளியீட்டு விழா 2025 ஜூலை 08 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.


55 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூஏயூஎஸ் வனசேகர ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்கள் 33 வருட சிறப்பு மிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 2025 ஜூலை 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.


அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வுபெற்ற இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் மேஜர் ஜெனரல் ஏஎம்ஆர் அபேசிங்க என்டிசீ அவர்கள் 2025 ஜூலை 08 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.