இந்திய மற்றும் இலங்கை படையினருக்கிடையிலான பரஸ்பர கலாசார பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய முப்படைகளைச் சேர்ந்த 120 பேர் கொண்ட குழுவினர் 2025 நவம்பர் 26 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. 2025 நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள இரண்டு நாள் விஜயம், இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல், கலாசார புரிதலை ஆழப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.