செய்தி சிறப்பம்சங்கள்

அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற இயந்திரவியல் காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் கேடபிள்யூ ஜயவீர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஓகஸ்ட் 04 அன்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.


2025 ஜூன் 24 அன்று ஆரம்பமாகிய படையணிகளுக்கிடையிலான தளபதி கிண்ண ரக்பி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள், 2025 ஆகஸ்ட் 01 அன்று, பனகொடையில் உள்ள இராணுவ முகாம் இராணுவ ரக்பி மைதானத்தில், இலங்கை கவச வாகனப் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி அணிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தன.


முதலாம் படை தளபதியும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஓகஸ்ட் 01 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இலங்கை இராணுவம் நாடு முழுவதும் 2025 ஜனவரி 20 முதல் ஊனமுற்றோர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்காக பல மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது.


வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஜூலை 30 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையால் நடத்தப்பட்ட 2024/2025 பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டி, 2025 ஜூலை 02 முதல் 29, வரை பனாகொட, வெலிசறை மற்றும் கட்டுநாயக்க கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற்றது.


இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கௌரவ திரு. ரெமி லம்பேர்ட், பிரான்சின் பாதுகாப்பு இணைப்பாளரான கேணல் இம்மானுவேல் பெல்ட்ரியோக்ஸுடன் இணைந்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜூலை 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 28 ஆம் திகதி கொழும்பு 07, கிராண்ட் மைட்லேண்டில் உள்ள நலன்புரி வசதி வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.


தேசிய படகோட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 40 வது தேசிய படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி தியவன்னா படகோட்ட நிலையத்தில் 2025 ஜூலை 23, 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் 24 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழ் உள்ள தொண்டர் படையலகுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.