
இலங்கை இராணுவத்தில் கட்டளை அதிகாரிகளாகப் பொறுப்பேற்கவுள்ள அதிகாரிகளுக்கான சிரேஷ்ட கட்டளை பாடநெறி எண். 13 இன் மாணவ அதிகாரிகள், தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 மார்ச் 26 அன்று, இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்.
தேசத்தின் பாதுகாவலர்
இலங்கை இராணுவத்தில் கட்டளை அதிகாரிகளாகப் பொறுப்பேற்கவுள்ள அதிகாரிகளுக்கான சிரேஷ்ட கட்டளை பாடநெறி எண். 13 இன் மாணவ அதிகாரிகள், தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 மார்ச் 26 அன்று, இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்.
35 வருட கால சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டி.பீ வெலகெதர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 2025 மார்ச் 26 ம் திகதியன்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 21 ஆம் திகதி மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நிருவாக ஆராய்வு ஒன்றை மேற்கொண்டார். இப்பயணம், அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாட்டுகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளை பார்வையிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் நியமிக்கப்பட்டதை முன்னிட்டு, சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் 2025 மார்ச் 21 ஆம் திகதி பாராட்டு விழா இடம்பெற்றது. படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ பதவி நிலை பிரதானிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் படையணியின் ஸ்தாபகரான மேஜர் ஜெனரல் டபிள்யூஐவீகேஎம் விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இலங்கை இராணுவம் தனது ஆறாவது இராணுவ கோட்பாடு வெளியீட்டை 2025 மார்ச் 20, அன்று இராணுவ தலைமையகத்தில் அறிமுகப்படுத்தியது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 18, அன்று மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயம், தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்தி, செயல்பாட்டு சிறப்பையும் பணியாளர்களின் நல்வாழ்வையும் இராணுவத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியா புதுதில்லியில் 2025 மார்ச் 12 அன்று நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டியில், உலகெங்கிலும் உள்ள சிறந்த பரா-தடகள வீரர்கள் பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்க ஒன்றிணைந்தனர்.
கண்டி தர்மராஜா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2025 மார்ச் 12 ஆம் திகதி லேக் வியூ பார்க் மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபரின் அழைப்பை ஏற்று இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டார். அவர் தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மார்ச் 12 அன்று 9 வது களப் பொறியியல் படையணிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இராணுவத்தின் செயற்பாடு மற்றும் நிர்வாகத் தயார்நிலையை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மார்ச் 11 அன்று களப் பொறியியல் பிரிகேட் மற்றும் 8 வது களப் பொறியியல் படையணிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.