செய்தி சிறப்பம்சங்கள்

2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற 76 வது இராணுவ தின கொண்டாட்டங்களுக்கு இணங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையில், அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்களினால் ஐந்து பிரிகேடியர்களுக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டது.


கம்புருபிட்டிய, அபிமன்சல II நல விடுதியில் வசிக்கும் கஜபா படையணியின் காலாட் படை சிப்பாய் ஆர்.டபிள்யூ.வீ. பியதிஸ்ஸ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தனது குறிப்பிடத்தக்க சாதணையை நிலைநாட்டி செரண்டிப் உலக சாதனை படைத்துள்ளார்.


76வது இராணுவ தினத்தை முன்னிட்டு, நாட்டைப் பாதுகாப்பதற்கான படையினரின் கடமையிலும் தொழில்முறை மற்றும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி கூறுகிறார். மேலும், நல்லிணக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார பாரம்பரியத்தை நிலைநாட்டுவதிலும், சமரச முயற்சிகளை வலுப்படுத்துவதிலும் இராணுவத்தின் முக்கியப் பங்கை அவர் வலியுறுத்தினார்.


இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் ஏஏடிபீ குலதிலக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றதுடன் 2025 ஒக்டோபர் 09 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.


59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ சேவையினை நிறைவு செய்து, இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இராணுவத் தலைமையகத்தின் காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


14வது இந்தோ-பசிபிக் இராணுவ பிரதிநிதிகள் மாநாடு, 49வது இந்தோ-பசிபிக் இராணுவ முகாமைத்துவ கருத்தரங்கு மற்றும் 11வது சிரேஷ்ட பட்டியலிடப்பட்ட தலைவர்கள் மன்றம் ஆகியவை 2025 செப்டம்பர் 23 முதல் 26 வரை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றன.


இலங்கை இராணுவத்தின் பரா தடகள வீரரான கோப்ரல் நுவான் இந்திக்க கமகே 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற உலக பரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்தார்.


உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, இலங்கை இராணுவம் நாடு முழுவதும் சமூக ஈடுபாடு மற்றும் சிறுவர்களின் நலனுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக நலன்புரி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.