இலங்கை இராணுவ சிவில் ஊழியர் நலன்புரி நிதிய சங்கத்தின் வருடாந்த கூட்டம் 2025 ஒக்டோபர் 31 அன்று கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.