செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியும், வழங்கல் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்கள் 35 வருட சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2025 ஜூலை 07 ஆம் திகதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூலை 03, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது மிஹிந்து செத் மெதுர நலவிடுதிக்கு உத்தியோகப்பூர்வமாக வாகனத்தினை ஒப்படைத்தார்.


இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூலை 03 அன்று இடம்பெற்ற இராணுவ நல நிதியிலிருந்து நிதி உதவி வழங்கும் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.


306 சி சிங்க கழகத்துடன் இணைந்து போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் 2025 மே 27 ம் திகதியன்று கண்டி இராணுவ அடிப்படை மருத்துவமனையில் அங்வீனமுற்றோர் மற்றும் சேவையில் உள்ள இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தது.


மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 61 வது தளபதியாக 2025 ஜூன் 26 அன்று தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் வெளியேறும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு இராணுவ பதவி நிலை பிரதானியாக பதவியேற்பதற்கு முன்னர் 2025 ஜூன் 25 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.


இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 67 வது பதவி நிலை பிரதானியாக (இராணுவத்தில் இரண்டாவது சிரேஷ்ட நியமனம்) 2025 ஜூன் 26 அன்று இராணுவத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக (இராணுவத்தில் மூன்றாவது சிரேஷ்ட நியமனம்) 2025 ஜூன் 26 அன்று இராணுவத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


இலங்கை கடற்படைத் தளபதியான ரியர் அட்மிரல் பி.ஏ.கே.எஸ்.பீ. பானகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, என்டிசீ, பீஎஸ்சீ, எம்.மரிடைம்போல், எம்பிஏ, எச்ஆர்எம், பீஜி பட்டபடிப்பு எச்ஆர்எம், பிஎம்எஸ், பட்டபடிப்பு எம்ஜிடி, ஏஎப்ஐஎன், ஜேபீ (முழு தீவு), அவர்கள் 2025 ஜூன் 25, அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


11 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 34 வருட சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2025 ஜூன் 25 ஆம் திகதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.