செய்தி சிறப்பம்சங்கள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.army.lk நாட்டில் அடிக்கடி பார்வையிடப்படும் பாதுகாப்பு துறை தளங்களில் ஒன்றாகும். இது பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக மீண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இராணுவத்தின் டிஜிட்டல் உருமாற்ற பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. புதுப்பிக்கப்பட்ட வலைத்தளம் 2025 ஜூன் 18 முதல் பார்வையாளர்களுக்கு நேரலையில் இருக்கும்.


2025 ஜூன் 16 ஆம் திகதி நிலை உயர்வு பெற்ற புதிய மேஜர் ஜெனரல்களின் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் நிலை உயர்வு பெற்ற புதிய மேஜர் ஜெனரல்களுக்கான அதிகாரச் சின்னங்களை சம்பிரதாயபூர்வமாக வழங்கினார்.


முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஹமில்டன் வனசிங்க (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை பொரளை பொது மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான இராணுவ வீரர்கள், பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு தேசத்திற்கு ஆற்றிய சேவையை கௌரவித்தனர்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 13 ஆம் திகதி 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.


முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2025 ஜூன் 13 அன்று தனது 91 வயதில் காலமானார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 12 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, 2 வது (தொ) இலங்கை சமிக்ஞை படையணி, 3 வது (தொ) இராணுவ புலனாய்வு படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி ஆகியவற்றை பார்வையிட்டார்.


தென் கொரியாவின் குமியில் நடைபெற்ற 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூன் 09 அன்று இராணுவத் தலைமையகத்தில் பாராட்டினார்.


தொண்டர் படையணி தலைமையகத்தின் அதிகாரிகள் உணவகம், இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களால் 2025 ஜூன் 5 அன்று மகா சங்கத்தினரால் நடத்தப்பட்ட மத சடங்குகளுடன், திறந்து வைக்கப்பட்டது.


இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் 2025 ஜூன் 06 அன்று இந்திய-இலங்கை நட்புறவு வாசிப்புப் பிரிவின் ஆரம்பத்துடன் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறித்தது, இது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.


2025 ஆம் ஆண்டு பாதுகாப்பு உரையாடலில் பங்கேற்க தற்போது இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத்தின் பாதுகாப்புத் அமைச்சின் பணியாளர் கடமைகள் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் எம்பீ சிங் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜூன் 05 அன்று இராணுவத் தலைமையக தளபதி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.