செய்தி சிறப்பம்சங்கள்

இராணுவத்தின் 25வது தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றதற்கு பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோவுடன் இணைந்து 07 ஜனவரி 2025 அன்று அத்திட்டிய மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்து போர் வீரர்களைப் பார்வையிட்டார்.


கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 45 வது பிரதி இராணுவ பதவிநிலைப் பிரதானியாக 02 ஜனவரி 2025 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார். இது இலங்கை இராணுவத்தின் மூன்றாவது மிக உயர்ந்த நியமனம் ஆகும்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் வியாழக்கிழமை (02) பிற்பகல் 150 இற்கும் மேற்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.


இராணுவத் தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி கடமைகளை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களிடம் இராணுவத் தலைமையகத்தில் 2 ஜனவரி 2025 அன்று நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது கையளித்தார்.


இலங்கை பீரங்கி படையணியின் லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 25 வது தளபதியாக செவ்வாய்க்கிழமை (31) இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.