சிவில் பணிகள்

54 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பணியாற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் கேபீஎம்என் குணசேகர அவர்கள் நேர்மை மற்றும் முன்மாதிரியாக செயற்பட்டு 102,220 ரூபாய் கொண்ட தொலைந்த பணப்பையை முக்கிய ஆவணங்களுடன் உரியவரிடம் அனுப்பி வைத்துள்ளார்.


77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 பெப்ரவரி 04, அன்று புனித தெரேசா முதியோர் இல்லத்தில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது காலாட் படைப்பிரிவினரால், “தூய இலங்கை திட்டத்தின்” ஒரு பகுதியாக, 2025 பெப்ரவரி 09, அன்று கடற்கரையில் சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை அரசாங்க அதிகாரிகளின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் ஹம்பாந்தோட்டை முதல் தங்காலை வரையிலான கடலோரப் பகுதியை உள்ளடக்கி இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 'தூய இலங்கை' திட்டத்தின் கீழ், புனானி படையலகு பயிற்சிப் பாடசாலை மற்றும் 7 வது இலேசாயுத இலங்கை பீரங்கிப் படையணி ஆகியவை சுதந்திர தினத்தை முன்னிட்டு 2025 பெப்ரவரி 04 அன்று ஒரு துய்மையாக்கும் திட்டத்தை மேற்கொண்டன.


77 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பி.ஏ.எம்.பீ. பாலசூரிய ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கெக்கிராவ, கிரி மெட்டியாவ காமினி வித்தியாலயத்தில், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகள், காலணிகள், புத்தகங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி 2025 பெப்ரவரி 04 அன்று நடைபெற்றது.


கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 241 மற்றும் 243 வது காலாட் பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், 2025 பெப்ரவரி 04, அன்று அக்கரைப்பற்று மற்றும் அருகம்புலியில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு மதிய உணவு மற்றும் பரிசில்கள் வழங்கும் நன்கொடை திட்டத்தை படையினர் முன்னெடுத்தனர்.


கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், 2025 பெப்ரவரி 04 அன்று கதிரவேலியில் உள்ள திலகவதி சிறுவர் இல்லத்தின் சிறார்களுக்கு 7 வது கெமுனு ஹேவா படையணி படையினர் மதிய உணவை வழங்கினர்.


கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ், 242 வது காலாட் பிரிகேட் மற்றும் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், 2025 பெப்ரவரி 4ம் திகதியன்று திருக்கோவில் மெதடிஸ்ட் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர்.


55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 55 வது காலாட் படைப்பிரிவின் படையினர் கிளிநொச்சி பிரதேச சிறுவர்களின் மகிழ்ச்சி மற்றும் திறமைக்காக 'சிறுவர் பூங்கா' ஒன்றை நிர்மாணித்தனர்.


கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 232 வது காலாட் பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ், 232 வது காலாட் பிரிகேட் படையினர் 2025 பெப்ரவரி 04 அன்று மதிய உணவு பொதி மற்றும் யோர்கட் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டனர்.