
233 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினர், சமீபத்தில் மகாசென்புர கிராமத்தில் நீர் வழங்கல் திட்டத்தை நிறுவினர்.
தேசத்தின் பாதுகாவலர்
233 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினர், சமீபத்தில் மகாசென்புர கிராமத்தில் நீர் வழங்கல் திட்டத்தை நிறுவினர்.
பிரிட்ஜிங் லங்கா மற்றும் கால்நடை பங்குதார்களான "வெட்ஸ் பார் பியூச்சர்" ஆகியவற்றுடன் இணைந்து, 54வது காலாட் படைப்பிரிவினரால், 2025 மார்ச் 24, முதல் 2025 ஏப்ரல் 6, வரை நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யும் திட்டம் நடத்தப்பட்டது.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் "தூய இலங்கை" திட்டத்திற்கு அமைய 4வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 2வது பொறியியல் சேவைகள் படையணி படையினர் 2025 மார்ச் 26 முதல் 2025 மார்ச் 30 வரை அனுராதபுரம் ரயில் நிலையத்தில் புதுப்பித்தல் மற்றும் தூய்மைபடுத்தும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 மார்ச் 30, அன்று மன்னார் மறைமாவட்ட மையத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவிகளையும் வழங்கும் நன்கொடைத் திட்டத்தை முன்னெடுத்தனர். இந்த முயற்சிக்கு சரண பௌத்த அறக்கட்டளையின் ஒருங்கிணைக்கப்பில் திரு. திருமதி. சியா வோங் சி மற்றும் வெளிநாட்டு நலம் விரும்பிகள் நிதியுதவி வழங்கினர்.
ஹேமாஸ் (தனியார்) நிறுவனத்தின் அனுசரணையுடன் 231 வது காலாட் பிரிகேட் மற்றும் 12 கெமுனு ஹேவா படையணி படையினர், திம்புலாகல தலுகான பகுதியில் உள்ள 80 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை 2025 மார்ச் 28 ஆம் திகதி மகாவலி பிரதிபா மண்டபத்தில் வழங்கினர்.
8 வது கள பொறியியல் படையணி படையினர் பூனாவ, குடாஹல்மில்லாவில் 8 வது பொறியியல் படையணியின் சிவில் ஊழியருக்காக ஒரு புதிய வீட்டைக் நிர்மணித்தனர்.
சீரற்ற காலநிலை காரணமாக சியம்பலாண்டுவ கரதந்தர குளக்கட்டு இடிந்து விழுந்ததை தொடர்ந்து மொனராகலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளிற்கமைய 18 வது கெமுனு ஹேவா படையணி படையினர் உடனடியாக செயற்பட்டு, 2025 மார்ச் 18 மற்றும் 19 ம் திகதிகளில் குளக்கட்டை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
221 வது காலாட் பிரிகேட் கட்டளையின் கீழ் இயங்கும் 2 வது (தொ) கஜபா படையணியின் படையினர் 2025 மார்ச் 20 அன்று திருகோணமலை மருத்துவமனை கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர்.
நாகொட ரோயல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 2025 மார்ச் 12, அன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபரின் அழைப்பை ஏற்று 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
521 வது காலாட் பிரிகேடினரால் 2025 மார்ச் 15 ம் திகதியன்று படையணி வளாகத்தில் இரத்த தான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.