சிவில் பணிகள்

சேருவில பகுதியில் தேவையுடைய ஏழைக் குடும்பத்திற்கு 09 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.


12 வது கெமுனு ஹேவா படையணி 2025 ஆகஸ்ட் 11 ஆம் திகதி தலுகானா கிராம சேவகர் பிரிவு அலுவலகத்தில் 80 எளிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தை நடாத்தியது.


பிள்ளைகளின் கல்வியை ஆதரிக்கும் நோக்கில், 24வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் 2025 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாடசாலை உதவி பொருட்கள் நன்கொடை வழங்கல் நடைபெற்றது.


2025 ஆகஸ்ட் 08 ஆம் திகதி பலாங்கொடை, இம்புல்பே, ஹால்பேயில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க, 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், இலங்கை விமானப்படையுடன் இணைந்து விரைவாக செயல்பட்டனர்.


அனுராதபுரம், புனித ஜோசப் பேராலயத்தில் தர்ம கற்பித்தல் மற்றும் பைபிள் சேவை மையத்தால் ஆகஸ்ட் 8 முதல் 10 வரை ஏற்பாடு செய்யப்பட்ட 2025 பதவி சிறுவர்கள் பேரணியில், தரம் 6 முதல் 11 வரை சுமார் 450 மாணவர்களும், வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை சேர்ந்த 50 ஆசிரியர்களும் பங்கேற்றனர்.


தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் வெடிகுண்டு மற்றும் (வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி) அச்சுறுத்தல்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்டறை 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியில் 2025 ஜூலை 29 அன்று நடத்தப்பட்டது.


51 வது காலாட் படைப்பிரிவினரால் 2025 ஜூலை 27ம் திகதி அன்று இருபாலை அன்னை தெரேசா முதியோர் இல்லம், புத்தூர் புனித லூகாஸ் மெதடிஸ்ட் முதியோர் இல்லம் மற்றும் உரும்பிராய் செல்வபுரம் உதய சூரியன் பாலர் பாடசாலை ஆகியவற்றில் தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


குருநாகல் பொத்துஹெர வடகட முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய பிளாஸ்டிக் தொழிற்சாலையில் 2025 ஜூலை 19, அன்று மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.


"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு இணங்க, 55 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழுள்ள படையலகுகளினால் 2025 ஜூலை 04 ஆம் திகதி சமூகம் சார்ந்த தொடர்ச்சியான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


54 வது காலாட்படை படைப்பிரிவின் படையினர், "தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, 2025 ஜூலை 09 அன்று 541, 542 மற்றும் 543 வது காலாட் பிரிகேடின் கீழ் உள்ள பகுதிகளில் டெங்கு தடுப்பு திட்டத்தை நடத்தினர்.