"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு இணங்கவும், 59 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் 2025 ஜூன் 21 ஆம் திகதி சிரமதான திட்டத்தை மேற்கொண்டனர். இந்த முயற்சி 592 வது காலாட் பிரிகேடினால் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒட்டுசுட்டானில் உள்ள சிவன் கோவிலில் நடைபெறவிருக்கும் வருடாந்த விழாவிற்கு தயாராகும் வகையில் வளாகத்தை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தியது.