சிவில் பணிகள்

7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி மற்றும் 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினர், 2024 டிசம்பர் 28 அன்று குளியாப்பிட்டிய, கிரிந்தாவ்வில் சிரேஷ்ட அதிகாராவாணையற்ற அதிகாரிக்கான புதிய வீட்டை நிர்மாணித்தனர்.


வெலிகந்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மகுல்பொகுண குளம் நிரம்பி வழிந்ததை தொடர்ந்து மகுல்பொகுண மற்றும் கலிங்கவிலவை இணைக்கும் வீதி பாரியளவில் சேதமடைந்திருந்தது. இந்த அனர்த்தத்திற்கு பதிலளிக்கும் வகையில், 23 வது காலாட் படைப்பிரிவினர், 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினருடன் இணைந்து 2025 ஜனவரி 02 ம் திகதி விரைவான புனரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.


541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐ.பீ. ஜயசிங்க ஆர்டபிள்யூபீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். 541 வது காலாட் பிரிகேட் படையினர் 30 டிசம்பர் 2024 அன்று கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொண்டனர்.