சிவில் பணிகள்

‘தூய இலங்கை’ திட்டத்திற்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 6வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 2025 பெப்ரவரி 18 அன்று முள்ளிவாய்க்கால் கடலோரப் பகுதியில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர். இத்திட்டத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.


புதன்கிழமை பயிற்சி நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக, "இலங்கை இராணுவத்தில் சட்ட கட்டமைப்பு" தொடர்பான சிறப்பு விரிவுரை 2025 பெப்ரவரி 13 அன்று யாழ்ப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.


641 வது காலாட் பிரிகேட் படையினரால் நாரங்கமுவ ஆரம்ப பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 50 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் 2025 பெப்ரவரி 13 ம் திகதியன்று முன்னெடுக்கப்பட்டது.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையில் 212 வது காலாட் பிரிகேட் படையினரால் 2025 பெப்ரவரி 17, அன்று “தூய இலங்கை திட்டத்திற்கமைய தூய்மைபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 144 வது காலாட் பிரிகேட், அரசாங்கத்தின் தூய இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 பெப்ரவரி 15 அன்று ஒரு பெரிய அளவில் சிரமதான பணியை முன்னெடுத்தனர். இந்த திட்டம் பொல்துவ சாலை, பாராளுமன்ற சாலை, இலங்கை-ஜப்பான் நட்புறவு சாலை, துருமித்திரு திட்டப் பகுதி மற்றும் தியவன்னா ஏரி போன்ற முக்கிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் 2025 பெப்ரவரி 16 அன்று "நமது கரைகளைப் பாதுகாத்தல், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல் மற்றும் தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குதல்" என்ற கருப்பொருளின் கீழ் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.


கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 3 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணி படையினர் 2025 பெப்ரவரி 11 அன்று பரகும் கிராமத்தில் குடிநீர் வழங்கல் திட்டத்தை திரு. மங்கள பீரிஸ் அவர்களின் நிதி உதவியுடன் நிறுவினர். இத்திட்டம் சமூகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய தூய இலங்கை திட்டத்துடன் இணைந்து, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 212 வது காலாட் பிரிகேட்டின் 7 (தொ) இலங்கை கவச வாகனப் படையணியின் படையினர் 2025 பெப்ரவரி 15 அன்று அவுகனை பழைய விகாரையில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.


54 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பணியாற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் கேபீஎம்என் குணசேகர அவர்கள் நேர்மை மற்றும் முன்மாதிரியாக செயற்பட்டு 102,220 ரூபாய் கொண்ட தொலைந்த பணப்பையை முக்கிய ஆவணங்களுடன் உரியவரிடம் அனுப்பி வைத்துள்ளார்.


77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 பெப்ரவரி 04, அன்று புனித தெரேசா முதியோர் இல்லத்தில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.