யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2025 ஜனவரி 14 ஆம் திகதி 51 வது காலாட் படைப்பிரிவின் சிமிக் பூங்காவில் நடைபெற்ற யாழ்ப்பாணத்தில் பொங்கல் கொண்டாட்டம் – 2025 நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மேஜர் ஜெனரல் எம்.பி.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, இராணுவ வீரர்களையும் உள்ளூர் சமூகங்களையும் ஒன்றிணைத்து முக்கியமான கலாசாரம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வில் கொண்டாடுகிறது.