சிவில் சமூகத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான இராணுவத் தளபதியின் நோக்கத்திற்கு அமைய , கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 24 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையில் 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் அரந்தலாவாவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தின் வீடு கட்டும் திட்டத்திற்கான அடி கல்லை நாட்டினர்.