சிவில் பணிகள்

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், "தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் 2025 பெப்ரவரி 23 அன்று பூநகரின் மற்றும் ஆனையிறவில் “ஒரு அழகான கடற்கரைப் பாதை மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்” எனும் கருப்பொருளில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


தூய இலங்கை திட்டத்தில், மன்னார் மாவட்ட பொதுமக்கள் 2025 பெப்ரவரி 23 அன்று 24 கடலோரப் பகுதிகளில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு பாதுகாப்புப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 57 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 பெப்ரவரி 20 அன்று நாரம்மல ருவங்கிரி மத்திய கல்லூரியில் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் தூய்மையாக்கல் திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு 57 வது காலாட் படைபிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.


வரவிருக்கும் நோன்பு காலத்திற்கு தயாராகும் முஸ்லிம் சமூகத்தை ஆதரிப்பதற்காக, ஹப்புத்தளை, தியத்தலாவை மற்றும் கஹகொல்ல ஜும்மா பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம்பழங்களை விநியோகிக்கும் திட்டத்தை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் 2025 பெப்ரவரி 24 அன்று முன்னெடுத்தனர்.


யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களுடைய வழிகாட்டுதலின் கீழ், தூய இலங்கை திட்டத்தின் முதல் கட்டம் பூநகரின் ஸ்ரீ விக்னேஸ்வரம் கல்லூரியில் 2025 பெப்ரவரி 20 அன்று முன்னெடுக்கப்பட்டது.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் ‘தூய இலங்கை’ திட்டத்தின் முதல் கட்டமாக, 2025 பெப்ரவரி 20, அன்று படையினர் பாடசாலை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.


தூய இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக படையினர் மேஜர் ஜெனரல் பீ.ஆர் பதிரவிரத்ன யூஎஸ்ஏடப்ளியூசீ அவர்களின் பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் 2025 பெப்ரவரி 20 அன்று பாடசாலை தூய்மையக்கல் மற்றும் புனரமைப்பு திட்டத்தை முன்னெடுத்தனர்.


21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூ.டப்ளியூ.எம்.பீ.டப்ளியூ.டப்ளியூ.பி.ஆர் பாலம்கும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 212 வது மற்றும் 561 வது காலாட் பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், தூய இலங்கை திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தில் அமைந்துள்ள பாடசலைகளில் தூய்மையக்கல் திட்டத்தை படையினர் நடத்தினர்.


கந்தானை, லக்பஹான சர்வதேச பாடசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாணவ தலைவர்களின் சின்னம் சூட்டு நிகழ்வு 2025 பெப்ரவரி 14 அன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்ஆர்டிஎஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


‘தூய இலங்கை’ திட்டத்திற்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 6வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 2025 பெப்ரவரி 18 அன்று முள்ளிவாய்க்கால் கடலோரப் பகுதியில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர். இத்திட்டத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.