இராணுவத் தளபதி கிண்ண கோல்ப் போட்டி 2025 தியத்தலாவையில் நிறைவு

ஆறு வருடங்களுக்கு பின்னர், இராணுவத் தளபதி கிண்ண கோல்ப் போட்டி 2025 செப்டம்பர் 27 அன்று தியத்தலாவை கோல்ப் மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களுடன் கலந்து கொண்டார்.

வருகை தந்த பிரதம விருந்தினரை மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தளபதியும் இலங்கை இராணுவ கோல்ப் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ் மெதகொட ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் தொடக்க உரையுடன் நிகழ்வு ஆரம்பமாகியது, அதைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் சம்பிரதாய ரீதியான டி-ஆப் வழங்கி போட்டியின் அதிகாரப்பூர்வ ஆரம்பத்தை வழங்கினார்.

சுற்று ஆட்டங்களுக்குப் பிறகு, பிரதம விருந்தினர் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களால் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இராணுவத் தளபதி நிறைவு உரையை நிகழ்த்தியதுடன் மேலும் இலங்கை இராணுவ கோல்ப் குழுவின் தலைவரின் நன்றியுரையுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன.

2025 ஆம் ஆண்டுக்கான இராணுவத் தளபதி கிண்ண கோல்ப் போட்டியின் வெற்றியாளர்கள் பின்வருமாறு:

சாம்பியன்ஷிப்

ஆண் - திரு. ஆர்.ஆர். லியோன்

பெண் – திருமதி. ஏ. பிரியதர்ஷனி

வெற்றியாளர்கள்

ஆண் - திரு. ஆர். ஆர். லியோன்

பெண் - திருமதி. ஏ. பிரியதர்ஷனி

இராணுவம் - லெப்டினன் கமாண்டர் எம்.பீ.எச். பெரேரா

இரண்டாம் இடம்

ஆண் - கெப்டன் ஜயலத் பெரேரா

பெண் - திருமதி. சதுனி வனசிங்க

இராணுவம் - கெப்டன் பீ.வீ.டீ. மகேஷ்

பின்னுக்கு அருகில்

பெண் – திருமதி. மனோரி அத்தநாயக்க

ஆண் - திரு.அபிமன் அபேவர்தன

மிக நீண்ட பயணம்

பெண் - விங் கமாண்டர் கே.பீ.எஸ்.எஸ். லட்சுமி

ஆண் - கெப்டன் பீ.வீ.டீ. மகேஷ்