25th September 2025
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பிரிகேடியர் டி.டி.டி சேரசிங்க யூஎஸ்பீ அவர்கள் எழுதிய “மரணயே ஹோராவ துடு பட்டவர ஜயசென்” எனும் நூல் வெளியீட்டு விழா 2025 செப்டெம்பர் 24 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.