செய்தி சிறப்பம்சங்கள்

கொமாண்டோ பிரிகேட் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.ஐ.எல். ஜயவீர யூஎஸ்பீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 நவம்பர் 13 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் எம்டபிள்யூஏஆர்சீ விஜேசூரிய ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 நவம்பர் 13 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி லயன்ஸ் சர்வதேச மாவட்டம் 306 D6 உடன் இணைந்து, "இரக்கத்தின் கரங்களால் போற்றப்படும் தேவையில் உள்ள இதயங்களின் எடைகள்" என்ற தலைப்பில் ஒரு பெரிய அளவிலான தொண்டு திட்டத்தை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் 2025 நவம்பர் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.


2025 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்திற்கான தயாரிப்புகளை இறுதி செய்வதற்கும், தற்போதைய ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை மதிப்பிடுவதற்கும், உள்ளக விவகாரப் பிரிவு அதன் 3வது காலாண்டிற்கான மதிப்பாய்வு கூட்டத்தை 2025 நவம்பர் 11 ஆம் திகதி இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் நடாத்தியது.


இலங்கை - இந்திய இராணுவத்திற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு இராணுவப் பயிற்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இந்தியாவின் கர்நாடக பெலகாவி (பெல்கம்) மராத்தா காலாட் படையணி தலைமையகத்தில் மித்ர சக்தி 2025 பயிற்சியின் தொடக்க விழா 2025 நவம்பர் 10, அன்று சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.


இலங்கை-இந்தியா இடையேயான 11வது இருதரப்பு இராணுவப் பயிற்சியான “மித்ர சக்தி பயிற்சி” 2025 நவம்பர் 10 முதல் 23 வரை இந்தியாவின் கர்நாடக பெலகாவியில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் (FTN) நடைபெற உள்ளது.


இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயப் பயிற்சி “வீரத்தின் பாதை 2025”, மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் 2025 நவம்பர் 04, அன்று வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் கூட்டு களப் பயிற்சி ஆகும்.


விஜயபாகு காலாட் படையணியின் மறைந்த பிரிகேடியர் டி.சி.ஜே.டபிள்யூ. ஜயசேகர (ஓய்வு) அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் 2025 நவம்பர் 04 அன்று, களனி புனித தெரசா தேவலாய மயானத்தில், இராணுவத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டது.


இலங்கை இலேசாயுத காலாட் படையணி தாய்நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்த வீரமிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இராணுவ மரபுகளுக்கமைய, 2025 நவம்பர் 05 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில், வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் அஞ்சலி நிகழ்வை இலங்கை இலேசாயுத காலாட் படையணி 144 வது ஆண்டு நிறைவுடன் இணைந்து நடத்தியது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 நவம்பர் 01 அன்று மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு செயல்பாட்டுத் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.