சிவில் பணிகள்

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 16 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூஎச் விக்ரமசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ எல்எஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 16 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் 2025 ஜனவரி 16 ம் திகதி மறைலுப்பை பனைநெடுங்குளம் குளக்கட்டை பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் இணைந்து சீரமைத்தனர்.


யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், சிமிக் பூங்கா வளாகத்தில் 2025 ஜனவரி 14 ம் திகதி செல்வபுரம் மற்றும் யோகபுரத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு புத்தகம் மற்றும் கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


"தூய இலங்கை" முயற்சியின் ஒரு பகுதியாக, 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.சி.எல். கலப்பத்தி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் கடற்கரை மற்றும் விகாரை சுத்தம் செய்யும் திட்டங்களை 24 வது காலாட் படைப்பிரிவு ஏற்பாடு செய்தது.


54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.பீ.ஏ.ஆர்.பீ. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மன்னார், தல்லடியில் 2025 ஜனவரி 10 அன்று 'ரணவிரு அபிநந்தன பூஜை 2025' நடைபெற்றது. இந்த நிகழ்வில் இராணுவ படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் 250 பிள்ளைகளுக்கு, தலா 5,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் பாடசாலை பைகள் வழங்கப்பட்டன.


59 வது காலாட் படைப்பிரிவு, இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாச்சார நிலையத்துடன் இணைந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில், எளிய மாணவர்களின் கல்விப் பயணத்தை ஆதரிக்கும் வகையில் உதவித்தொகை மற்றும் அத்தியாவசிய பாடசாலைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.


24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.சி.எல். கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 24 வது காலாட் படைப்பிரிவு படையினர் உஹன பிரதேசத்தின் 35 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை 2025 ஜனவரி 09 ஆம் திகதி ருஹுணுகமவில் நடாத்தினர்.


காட்டு யானைகளால் நெல் வயல்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும், பிரதேசவாசிகளை பாதுகாப்பதற்கும் வனவிலங்கு மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து கிழக்கு பாதுகாப்புப் படை 2025 ஜனவரி 02 அன்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.


தொழிற்கல்வி பிரதி அமைச்சரும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு. நலின் ஹேவகே அவர்களின் தலைமையில், தூய இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக "அழகான தீவு, சிரிக்கும் மக்கள்" என்ற கருப்பொருளின் கீழ், பெந்தோட்டை தொடக்கம் கொவியாபனை வரையிலான பாரிய கடற்கரைப் பகுதியை சுத்தம் செய்யும் திட்டம் 2025 ஜனவரி 12 ஆம் திகதி காலியில் ஆரம்பிக்கப்பட்டது.


ஆதரவு மற்றும் சமூக ஒத்துழைப்பின் அடையாளமாக உடுவில், வலிகாமம் தெற்கு பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு 2025 ஜனவரி 11 ஆம் திகதி ஒரு ஏழைக் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.


வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சிகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், செட்டிகுளம், முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2025 ஜனவரி 11 ஆம் திகதி கண் மற்றும் மருத்துவ பரிசோதனைத் திட்டம் நடாத்தப்பட்டது.