8th February 2025
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 241 மற்றும் 243 வது காலாட் பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், 2025 பெப்ரவரி 04, அன்று அக்கரைப்பற்று மற்றும் அருகம்புலியில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு மதிய உணவு மற்றும் பரிசில்கள் வழங்கும் நன்கொடை திட்டத்தை படையினர் முன்னெடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.