இராணுவ சிறப்பம்சம்

11 வது காலாட் படைப்பிரிவினால், வெளிச்செல்லும் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டீ.சீ.எம்.ஜீ.எஸ்.டீ. குரே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் ஒரு சம்பிரதாய நிகழ்வை 2025 டிசம்பர் 05 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.


விஷேட படையணியின் மேஜர் ஜெனரல் எம்.பீ.கே.எல். அமரசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 12 வது காலாட் படைப்பிரிவின் 21 வது தளபதியாக 2025 டிசம்பர் 04 ஆம் திகதி 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.


சிறுநீரகம், புற்றுநோய் மற்றும் தலசீமியா நோயாளிகளுக்கு இரத்தப் பற்றாக்குறை நிலவுவது குறித்து அனுராதபுரம் இரத்த வங்கியின் அவசர கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, 21 வது காலாட் படைப்பிரிவு உடனடியாக நடமாடும் இரத்த தான திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.


பிரிகேடியர் டபிள்யூ.வீ.எஸ். பொதேஜு (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் நாரஹேன்பிட்டிய இராணுவத் தள மருத்துவமனையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2025 நவம்பர் 25 ஆம் திகதி காலமானார். இறக்கும் போது அவருக்கு 76 வயது ஆகும்.


2025 நவம்பர் 25 ஆம் திகதி வவுனியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவன காட்சியகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், கட்டிடம் மற்றும் அதன் உள்ளடக்கங்களுக்கு சேதம் ஏற்பட்டது.


2025 நவம்பர் 24 ஆம் திகதி பாணந்துறை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பிரதான கட்டிடம் மற்றும் அருகிலுள்ள கலஞ்சியசாலை என்பன பெரும் சேதமடைந்தது.


தலகொல்ல, ரம்புக்கனை-மாவனெல்ல வீதியில் 2025 நவம்பர் 23 அன்று பயணித்த முச்சக்கர வண்டியின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதையடுத்து இராணுவத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.


21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.என்.கே. பெரேரா அவர்கள் 2025 நவம்பர் 21 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.


2025 நவம்பர் 19 ஆம் திகதி ஒஹியவிற்கும் இடல்கஷ்ஹின்னவிற்கும் இடையில் புகையிரத பாதையில் ஏற்பட்ட பாறை சரிவினால் ஒரு புகையிரத இஞ்சின் சேதமடைந்துள்ளதுடன் பாறை சரிவினால் தண்டவாளம் முற்றிலுமாகத் மூடப்பட்டு, அனைத்து புகையிரத போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.