இராணுவ சிறப்பம்சம்

592 வது காலாட் பிரிகேடின் 17வது ஆண்டு நிறைவு விழா 29 டிசம்பர் 2024 அன்று பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎல்ஐ கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.


பருத்தித்துறை பாவற்கரை ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்காக 4வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை பயனாளிக்கு 06 ஜனவரி 2025 அன்று கையளித்தார்.


விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் கேஎடிசீஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 06 ஜனவரி 2025 அன்று இராணுவத் தலைமையகத்தின் அனைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.


இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் பிஏடிஆர்ஏசி விஜயசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்எசீஜீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 06 ம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சுருக்கமான நிகழ்வின் போது பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் 39 வது பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.


விசேட படையணி தனது 28வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஜனவரி 03 அன்று விசேட படையணி தலைமையகத்தில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.


யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 05 ஜனவரி 2025 அன்று 51 வது காலாட் படைப்பிரிவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.


2025 ஜனவரி 3 ம் திகதி பொல்கஹவெல புனித பெர்னாடெட்ஸ் மாதிரிப் பாடசாலையில் நடைபெற்ற மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு நிகழ்வில் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பாடசாலை அதிபரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்களின் உணவகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாப்பாட்டு மண்டபம் 03 ஜனவரி 2025 படையணி தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2 ஜனவரி 2025 அன்று 1 வது இலங்கை இலோசாயுத காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.


இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் நேற்று (ஜனவரி 03) யாழ்ப்பாணம், வேலணை நான்காம் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இச்சுற்றிவளைப்பின் போது இலங்கையில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டாத 50 மில்லியன் பெறுமதியான பூச்சிக்கொல்லி மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச்சுற்றிவளைப்பின் போது, மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.