இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரண்டு பெரிய சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக ஹெராயின் மற்றும் வல்லப்பட்டை (கைரினோப்ஸ் வல்ல) கைப்பற்றப்பட்டதுடன், சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் தென் மாகாணத்தில் 2025 நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்டன.