இராணுவ சிறப்பம்சம்

வழங்கல் கட்டளை தலைமையகத்தின் 45 வது ஆண்டு நிறைவினை, வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஈ.எம்.எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி ஏஏடீஓ அவர்களின் வழிகாட்டலின் கீழ், பனகொடையில் உள்ள இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகம் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி வளாகத்தில், இராணுவ சம்பிரதாயங்களுடன் 2025 ஜனவரி 8 ஆம் திகதி கொண்டாடியது.


வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 07 ஜனவரி 2025 அன்று 4 வது தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 5 வது தேசிய பாதுகாவலர் படையணிக்கு முறையான விஜயம் மேற்கொண்டார்.


கெமுனு ஹேவா படையணி படையினர் கஹெங்கம பிரதேசத்தினருடன் இணைந்து, 2025 ஜனவரி 04, அன்று கஹெங்கம பகுதியில் 2000 மீட்டருக்கும் அதிகமான சாலையை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.


பூமலாந்தன் ஆரம்ப பாடசாலையில் பூமலாந்தன் ஆரம்ப பாடசாலை மற்றும் மது சிங்கள மகா வித்யாலயத்தைச் சேர்ந்த 94 மாணவர்களுக்கு 542 வது காலாட் பிரிகேட்டினரால் 2025 ஜனவரி 7 அன்று அத்தியாவசிய கற்றல் உபகரணம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.


குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை தனது 36 வது ஆண்டு நிறைவு விழாவை 06 ஜனவரி 2025 அன்று குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை வளாகத்தில், குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் கொண்டாடியது.


இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் 03 ஜனவரி 2025 அன்று நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வில், வெளிசெல்லும் இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.


23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி அகியவற்றின் கட்டளை அதிகாரிகளின் தலைமையின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் 04 ஜனவரி 2025 அன்று இரண்டு பயனுள்ள நன்கொடை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.


கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினாரால் வெளிசெல்லும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு 06 ஜனவரி 2025 அன்று பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்ஜிஏ மலந்தெனிய ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 12 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் தலைமையில் 12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் விஜய பராக்கிரம ஆரம்ப பாடசாலை மற்றும் திம்புலாகல களுகல பலட்டியாவ ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளின் 722 மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வை 05 ஜனவரி 2025 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.


மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பீரங்கி படையணியின் 24வது படைத் தளபதியாக 2025 ஜனவரி 02 அன்று பனாகொட பீரங்கி படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.