மேஜர் ஜெனரல் கே.எம்.ஜி பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 16, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 13 வது தலைமை சமிக்ஞை அதிகாரியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தேசத்தின் பாதுகாவலர்
மேஜர் ஜெனரல் கே.எம்.ஜி பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 16, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 13 வது தலைமை சமிக்ஞை அதிகாரியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எம்.கே.ஜீ.கே வீரசேகர டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எயூஎஸ்டபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் விசேட படையணியின் 16 வது படைத் தளபதியாக 2025 டிசம்பர் 15, அன்று விசேட படையணி தலைமையகத்தின் கடமைகளை பொறுப்பேற்றார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்ட அமுலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கையின் போது, 2025 டிசம்பர் 17 ஆம் திகதி குறிப்பிடத்தக்க கைப்பற்றல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தித்வா சூறாவளியைத் தொடர்ந்து அனர்த்த நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடியாக ஒன்றிணைக்கப்பட்ட மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் பிரிவுகளின் படையினர் ஆற்றிய முன்மாதிரியான சேவையைப் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் பாராட்டினார். 2025 டிசம்பர் 17 அன்று பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இந்தப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 25 வது போர் கருவி பணிப்பாளர் நாயகமாக இராணுவ தலைமையகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.
பிரிகேடியர் டி.ஐ.எஸ். ஜயசிங்க என்டிசி பீஎஸ்சீ அவர்கள் இராணுவ வழங்கல் கல்லூரியின் 12 வது தளபதியாக 2025 டிசம்பர் 15 அன்று மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பிரிகேடியர் ஆர்.எம்.சி. ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள் இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகத்தின் 41 வது பணிப்பாளராக 2025 டிசம்பர் 11 அன்று இராணுவ தலைமையகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகெட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இராணுவ புலானாய்வு படையணியின் படைத்தளபதியாக 2025 டிசம்பர் 06 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக, ஜெர்மன் கூட்டமைப்பு ஆயுதப் படைகளைச் சேர்ந்த ஐக்கிய நாடுகளின் நடமாடும் பயிற்சிக் குழு, 2025 டிசம்பர் 01 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டது.
இலங்கை சமிக்ஞை படையணியின் 19 வது படைத்தளபதியாக பிரிகேடியர் கே.எம்.ஜி. பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 2025 டிசம்பர் 01, அன்று இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.