இராணுவ சிறப்பம்சம்

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் எஸ். விஜேசிரிவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையக போக்குவரத்து பணிப்பகத்தின் 34 வது பணிப்பாளராக 2025 ஆகஸ்ட் 14 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார்.


கஜபா படையணி, அதன் ஸ்தாபக தந்தையான மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் 33 வது நினைவு தினம் படையணி படைத்தளபதியும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்பு மற்றும் ஆதரவுடன் 2025 ஆகஸ்ட் 8 ஆம் திகதி கொண்டாட்டப்பட்டது.


இலங்கை இராணுவத்தின் உள்ளக விவகார பிரிவு, ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் நிறுவனத்திற்குள் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, 2025 ஏப்ரல் 01 அன்று நிறுவப்பட்டதுடன், அதன் இரண்டாவது முன்னேற்ற ஒருங்கிணைப்பு மாநாடு இன்று (2025 ஆகஸ்ட் 12) இராணுவ பதவி நிலை பிரதானி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமண்டா ஜான்ஸ்டன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் கிறிஸ் போவ்லர் அவர்களுடன் இணைந்து, எம்பிலிப்பிட்டிய இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலைக்கு 2025 ஆகஸ்ட் 11 ஆம் திகதி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டனர்.


கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.டீ. கொடேவத்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) 33 வது தளபதியாக 2025 ஆகஸ்ட் 08 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 33வது நினைவு தினம் 2025 ஆகஸ்ட் 08 அன்று அனுராதபுரம் டென்சில் கொப்பேகடுவ நினைவுச் தூபியில் நடைபெற்றது.


2025 ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஊர்காவற்துறை அராலி முனைய நினைவுத்தூபியில், நாட்டின் புகழ்பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவரான லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ மற்றும் 1992 ஆகஸ்ட் 08 ஆம் திகதி அராலி முனையில் எல்.ரீ.ரீ.ஈயின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த பல இராணுவ போர் வீரர்களின் அழியாத நினைவுகளை நினைவு கூரப்பட்டது.


2025 ஆகஸ்ட் 09 ஆம் திகதி கிளிநொச்சி முதலாம் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் முதலாம் படையின் 8 வது தளபதியாக பதவியேற்றார்.


இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதியாக சிரேஷ்ட அதிகாரி டி.என். மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், 2025 ஆகஸ்ட் 06 ஆம் திகதி இராணுவ புலனாய்வு படையணி தலைமையத்தில் தொடர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.


விஷேட படையணி, வெளிச்செல்லும் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை அளித்தது.