பிரிகேடியர் பி.ஏ.டி.ஆர்.ஏ.சீ விஜயசேகர ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ யூஎஸ்ஏசீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
தேசத்தின் பாதுகாவலர்
பிரிகேடியர் பி.ஏ.டி.ஆர்.ஏ.சீ விஜயசேகர ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ யூஎஸ்ஏசீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
2025-09-12
இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் ஆர்.ஆர்.எம்.பீ.என்.பி பம்பரதெனிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 10 அன்று இராணுவத் தலைமையகத்தில் பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் 40 வது பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
மின்னேரியா காலாட் பயிற்சி நிலையம் தனது 41வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கொண்டாடியது. இந்நிகழ்வின் போது போர் வீரர்களின் நினைவுத் தூபியில் தளபதி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பும் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சி மற்றும் அனைத்து நிலையினருக்குமான இரவு விருந்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
பிரிகேடியர் ஏ.கே.சீ.எஸ் டி சில்வா ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் 48 வது தளபதியாக 2025 ஆகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெற்ற விழாவின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தம்புள்ளை, இனாமலுவையை தலைமையிடமாகக் கொண்ட 53 வது காலாட் படைப்பிரிவு (அவசர கால தாக்குதல் படை), 2025 ஆகஸ்ட் 24 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் அதன் 30 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. இந்த நிகழ்வு 53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.டி கொடவத்த ஆர்டபிள்யூபீ ஆர்ஸ்பீ அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சு, தேசிய குண்டு செயலிழப்பு திட்டத்தின் திருத்திய இலங்கை குண்டு செயலிழப்பு நிறைவு மூலோபாயத்தை (2025-2027) 2025 ஆகஸ்ட் 28 ஆம் திகதி பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அறிமுகப்படுத்தியது.
24 வது காலாட் படைப்பிரிவின் 17 வது தளபதியாக மேஜர் ஜெனரல் கே.டபிள்யூ ஜயவீர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 26 ஆம் திகதி 24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
51 வது காலாட் படைப்பிரிவு அதன் 30 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஆகஸ்ட் 23 ஆம் திகதி அதன் தலைமையகத்தில், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.
பிரிகேடியர் சி.டி. விக்ரமநாயக்க டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 22 வது பிரதம களப் பொறியியலாளராக 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
1987 – 1990 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் எல்ரீரீ பயங்கரவாத்திற்கு எதிராகப் போராடிய இந்திய அமைதி காக்கும் படையில் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பலாலி இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.