இராணுவ சிறப்பம்சம்

காட்டு யானைகளால் நெல் வயல்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும், பிரதேசவாசிகளை பாதுகாப்பதற்கும் வனவிலங்கு மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து கிழக்கு பாதுகாப்புப் படை 2025 ஜனவரி 02 அன்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.


தொழிற்கல்வி பிரதி அமைச்சரும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு. நலின் ஹேவகே அவர்களின் தலைமையில், தூய இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக "அழகான தீவு, சிரிக்கும் மக்கள்" என்ற கருப்பொருளின் கீழ், பெந்தோட்டை தொடக்கம் கொவியாபனை வரையிலான பாரிய கடற்கரைப் பகுதியை சுத்தம் செய்யும் திட்டம் 2025 ஜனவரி 12 ஆம் திகதி காலியில் ஆரம்பிக்கப்பட்டது.


ஆதரவு மற்றும் சமூக ஒத்துழைப்பின் அடையாளமாக உடுவில், வலிகாமம் தெற்கு பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு 2025 ஜனவரி 11 ஆம் திகதி ஒரு ஏழைக் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.


மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் அதன் பயிற்சி நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக "தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை 2025 ஜனவரி 8 அன்று 4 வது இலங்கை பீரங்கிப் படையணியில் ஏற்பாடு செய்தது.


இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆரடபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 2025 ஜனவரி 07, அன்று பனாகொடையில் உள்ள படையணி மையம் மற்றும் மத்தேகொடையில் உள்ள படையணி தலைமையகத்தில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார்.


வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சிகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், செட்டிகுளம், முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2025 ஜனவரி 11 ஆம் திகதி கண் மற்றும் மருத்துவ பரிசோதனைத் திட்டம் நடாத்தப்பட்டது.


12 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.ஏ.கே குணரத்ன யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாடசாலை உபகரணங்கள் நன்கொடை வழங்கும் நிகழ்வு 2025 ஜனவரி 4, அன்று ஹம்பாந்தோட்டை கிரிந்தகம ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.


21 வது காலாட் படைப்பிரிவு படையினர், 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி மற்றும் 5 வது (தொ) கஜபா படையணி படையினர் 2025 ஜனவரி 10 ஆம் திகதி திவுல்வெவ குளக்கட்டின் பகுதியளவு சேதமடைந்த பகுதியை வெற்றிகரமாக சரிசெய்தனர். இந்த சேதம் சுற்றியுள்ள சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தது.


இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 8 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 40 வது நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ அமரபால ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் இராணுவப் படையணிகளுக்கு இடையிலான அணிநடை மற்றும் அணிநடை கோது போட்டி – 2024 ஆம் ஆண்டு ‘சிறந்த அணிநடை பயிற்றுவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக 9 வது கள பொறியியல் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II ஐ.ஜி.எஸ்.பி.ஜே. இஹலகெதரவைப் பாராட்டினார்.