இராணுவ சிறப்பம்சம்

இலங்கை பொறியியல் படையணி, தனது 74 வது ஆண்டு நிறைவை 2025 நவம்பர் 7 முதல் 14 ஆம் திகதி வரை பனாகொடை படையணி தலைமையகம் மற்றும் மத்தேகொட சப்பர் இல்லத்திலும் தொர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் சமய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.


மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் அதன் 13 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 நவம்பர் 15 ஆம் திகதி தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.


மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேவர்தன டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் கெமுனு ஹேவா படையணியின் 26 வது படைத் தளபதியாக 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி குருவிட்ட படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.


பிரிகேடியர் என்.டபிள்யூ.பி.எஸ்.எம். பெரேரா, முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 2025 நவம்பர் 13 அன்று இராணுவத் தலைமையகத்தில் கடமைப் பொறுப்பேற்றார்.


அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 11 வது காலாட் படைப்பிரிவின் படையினர், 2025 நவம்பர் 5 ஆம் திகதி பல்லேகலை கைதொழில் பேட்டையிலுள்ள சக்தி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீயை உடனடியாக கட்டுப்பாட்டுகுள் கொண்டு வர நடவடிக்கையை முன்னெடுத்தனர்.


மேஜர் ஜெனரல் எஸ்ஏயூஏ சோலங்கராச்சி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 நவம்பர் 10 அன்று படைப்பிரிவில் இடம்பெற்ற நிகழ்வின் போது 56 வது காலாட் படைப்பிரிவின் 31 வது படைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.


அம்பலாங்கொடை பிரதேச சபைக்குச் சொந்தமான கட்டிடத்தில் அமைந்துள்ள ஒரு மின் உபகரணக் கடையில் 2025 நவம்பர் 09 அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்து மேலும் 12 கடைகளுக்கும் பரவியதுடன், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவு கீழ் இயங்கும் 573 வது காலாட் பிரிகேடினரால் தீவிர நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


இராணுவத் தலைமையகத்தின் நிதி முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கரந்தெனிய படையணி தலைமையகத்தில் நடைபெற்ற கௌரவ விழாவில், இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதியாக 2025 நவம்பர் 07 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.


கோப்பிவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவலைப்பின் போது சுமார் ரூ.8 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டையுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.