இராணுவ சிறப்பம்சம்

2025 ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஊர்காவற்துறை அராலி முனைய நினைவுத்தூபியில், நாட்டின் புகழ்பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவரான லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ மற்றும் 1992 ஆகஸ்ட் 08 ஆம் திகதி அராலி முனையில் எல்.ரீ.ரீ.ஈயின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த பல இராணுவ போர் வீரர்களின் அழியாத நினைவுகளை நினைவு கூரப்பட்டது.


2025 ஆகஸ்ட் 09 ஆம் திகதி கிளிநொச்சி முதலாம் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் முதலாம் படையின் 8 வது தளபதியாக பதவியேற்றார்.


இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதியாக சிரேஷ்ட அதிகாரி டி.என். மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், 2025 ஆகஸ்ட் 06 ஆம் திகதி இராணுவ புலனாய்வு படையணி தலைமையத்தில் தொடர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.


விஷேட படையணி, வெளிச்செல்லும் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை அளித்தது.


53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) 32 வது தளபதியான மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள், 2025 ஆகஸ்ட் 06 ஆம் திகதி தனது கடமைகளை ஒப்படைத்தார்.


இலங்கை கவச படையணியின் பிரிகேடியர் வை.எச்.பீ ரங்கஜீவ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் அவர்கள் 2025 ஆகஸ்ட் 06 அன்று இராணுவத் தலைமையகத்தில் காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பகத்தின் 27 வது பணிப்பாளராக கடமை ஏற்றுக்கொண்டார்.


இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் 11 வது ஆண்டு நிறைவை 2025 ஜூலை 31, அன்று தொடர்ச்சியான நிகழ்வுகளுடன்,இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிடிபீ சிறிவர்தன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.


முதலாம் படையின் 7வது தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2025 ஆகஸ்ட் 03 அன்று கிளிநொச்சி முதலாம் படைத் தலைமையகத்தில் முறையான இராணுவ நிகழ்வின் போது தனது கடமை விலகினார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பி.எம்.ஆர்.ஜே. பண்டார அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, 2025 ஜூலை 30 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி வளாகத்தில் அவருக்கு பிரியாவிடை அளிக்கும் ஒரு முறையான விழாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


இலங்கை அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மேத்யூ ஹவுஸ் அவர்கள் 2025 ஜூலை 26 அன்று 22 காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.எல்.எஸ். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களை 22 வது காலாட் படைப்பிரிவில் சந்தித்தார்.