இராணுவ சிறப்பம்சம்

கூரகல பிஹிம்பியகொல்ல வனப்பகுதியில் 2025 ஜூன் 03 ஆம் திகதி ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் விரைவாக அனுப்பப்பட்டனர். இத்திட்டம் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.


பிரிகேடியர் கே.எம்.என்.ஏ.டபிள்யூ.கே. பெரேரா ஏஏடிஓ அவர்கள் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 2025 ஜூன்...


இலங்கை பொறியியல் படையணி, மேஜர் ஜெனரல் டி.சி. பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் நிறைவு குறிக்கும் வகையில் 2025 மே 29 ஆம் திகதி பிரியாவிடை அளித்தது.


பிரிகேடியர் கேஏடிசீஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் , 2025 மே 29 அன்று பனாகொடை இராணுவ விளையாட்டு பணிப்பகத்தில் 17வது விளையாட்டு பணிப்பாளராக உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்றார்.


61 வது காலாட் படைப்பிரிவின் படையினர், 61 வது காலாட் படைப்பிரிவின் 17 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காலி சம்போதி சிறுவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் வசிக்கும் 50 சிறப்பு தேவையுடையோருக்கான சமூக சேவைத் திட்டத்தை 2025 மே 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில், காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தினர்..


இலங்கை இராணுவத்தின் 16 வது ஒழுக்க பணிப்பாளர் நாயகமாக பிரிகேடியர் ஏ.எம்.ஆர். அபேசிங்க என்டிசீ அவர்கள் 2025 மே 29 ஆம் திகதி இராணுவத் தலைமையக ஒழுக்க பணிப்பக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.


தேசிய போர்வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணம் 2025 மே 29 அன்று மைலப்பிட்டிய போர்வீரர்கள் நினைவுத் தூபியில் போர்வீரர்களை நினைவுகூர்ந்தது.


பிரிகேடியர் வைஎம்எஸ்சீபி ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2025 மே 15 வியாழக்கிழமை அன்று இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் இடம்பெற்ற சுருக்கமான விழாவில், இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.


குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் வெளிச்செல்லும் தளபதி பிரிகேடியர் ஆர்பீ முனிபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு தியதலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை 2025 மே 07 ஆம் திகதி பிரியாவிடை வழங்கியது.


இராணுவ தலைமையகத்தின் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டீஎன் மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் கம்பளை சாஹிரா கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டி விழாவில் பிரதம அதிதியாக 23 ஏப்ரல் 2025 அன்று கலந்து கொண்டார்.