இராணுவ சிறப்பம்சம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் ஓய்வுபெறும் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பி.எம்.ஆர்.ஜே. பண்டார அவர்களுக்கு விஜயபாகு காலாட் படையணி படையினர் 2025 ஜூலை 28, அன்று போயகனே விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கினர்.


இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான சுவிஸ் தூதுவர் கௌரவ வைத்தியர் சிரி வால்ட் அவர்கள், 2025 ஜூலை 29 அன்று யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.பீ.பீ. குலதிலக்க என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது காலாட் படைப்பிரிவு, தனது 28 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஜூலை 23 ஆம் திகதி தொடர்ச்சியான நினைவு நிகழ்வுகளுடன் கொண்டாடியது.


22 வது காலாட் படைப்பிரிவு, அதன் 28 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஜூலை 23 ஆம் திகதி அதன் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.எல்.எஸ். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான இராணுவ சம்பிரதாய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.


மாலைத்தீவு குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஹசன் அமீர் அவர்கள் 2025 ஜூலை 23 ஆம் திகதி குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு, குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் தற்போது துப்பாக்கி சூட்டு பயிற்சியில் கலந்து கொண்டுள்ள இரண்டு மாலைத்தீவு பாதுகாப்புப் படை வீரர்களான சார்ஜன் ஹுசைன் பஷீன் மற்றும் சார்ஜன் அஷாம் அகமது ஆகியோரின் பயிற்சி முன்னேற்றம் மற்றும் நிர்வாக விடயங்களை ஆய்வு செய்தார்.


2025 ஜூலை 22 ஆம் திகதி இராணுவப் புலனாய்வு படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பத்தரமுல்லை, மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளால் ராஜகிரிய பிரதேசத்தில் ஒரு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, பன்னிப்பிட்டிய, தலவத்துகொடை பிரதேசத்தில் வசிக்கும் ஒரு சந்தேக நபரிடமிருந்து சுமார் 12 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.


1996 ஜூலை மாதத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவு முகாமைப் பாதுகாப்பதில் இறுதி தியாகம் செய்த வீரமரணமடைந்த போர்வீரர்களை கௌரவிக்கும் வருடாந்த நினைவு நிகழ்வு 2025 ஜூலை 17 ஆம் திகதி முல்லைத்தீவு போர் வீரர்கள் நினைவுத்தூபியில் நடைபெற்றது.


தேசத்திற்காக உயர்ந்த தியாகம் செய்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில், விசேட படையணி தலைமையகத்தில் 2025 ஜூலை 12, அன்று விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு விசேட படையணியின் படைத் தளபதியும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எம்டிஐ மகாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.


முல்லைத்தீவுப் போரில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களை கௌரவிக்கும் 29 வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 2025 ஜூலை 19 அன்று 1 வது விசேட படையணி போர் வீரர்கள் நினைவு தூபியில் நடைபெற்றது. இதன் போது 1996 ஜூலை 19 அன்று மறைந்த கேணல் ஏஎப் லாபீர் பீடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் தாய்நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இரண்டு அதிகாரிகள் உட்பட 36 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


58 வது காலாட் படைப்பிரிவின் 16 வது ஆண்டு நிறைவை மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேயவர்தன டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜூலை 02 அன்று பிரிவு தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது.