பயிற்சி

தொற்றாத நோய்கள் தொடர்பான விரிவுரை 2025 மே 01 ம் திகதி அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது. இந்த விரிவுரையை இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் கெப்டன் ஜீஏ ராஜபக்ஷ நிகழ்த்தினார். இவ் விழிப்புணர்வு கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர்களிடையே விழிப்புணர்வையும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.


மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் 29 அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி - 88 (2025/I) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 29 அன்று நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் காலாட்படை பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் எம்டபிள்யூஎஸ் மில்லகல ஆர்டபீள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


கனிஸ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் - 106 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 10 அன்று அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகம், மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உயிரி மருத்துவ எரிவாயு அமைப்பின் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை 2025 ஏப்ரல் 22 அன்று நாரஹேன்பிட்டா மருத்துவமனையில் நடாத்தியது.


21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விரிவுரை 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி 21 வது காலாட் படைப்பிரிவு கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.


வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 வது காலாட் படைப்பிரிவில் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண் 23 வெற்றிகரமாக நிறைவடைந்தது.


இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில், ஐக்கிய நாடுகள் பணிக்கான தையல்காரர்கள் மற்றும் வான்வழி மருத்துவ குழுவிற்கான முன் பயிற்சி பாடநெறி 2025 மார்ச் 27, அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.


வன்னி பாதுகாப்பு படை தலைமையக சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்துடன் இணைந்து, 2025 ஜனவரி 15 ஆம் திகதி தலைமையக கேட்போர் கூடத்தில் பெண்களின் உரிமைகள் தொடர்பான கல்வி செயலமர்வினை நடத்தியது.


சமீபத்திய ஆண்டுகளில், நிகழ்நிலை சூதாட்டம் மற்றும் விளையாட்டு அதன் வசதி மற்றும் அணுகுதல் காரணமாக பிரபலமடைந்து வருகிறது. இருப்பினும், இது சமூகத்திற்கு பல ஆபத்துகளையும் தீங்குகளையும் ஏற்படுத்துகின்றது. சமகால சூழலில் இது இராணுவ வீரர்களிடையே பரவலாகப் பரவி வருகிறது. இந்த ஆபத்தை சரியான நேரத்தில் உணர்ந்த இலங்கை இராணுவ தொண்டர் படையணி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நிகழ்நிலை சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளின் விளைவுகள் குறித்த விரிவுரையை ஏற்பாடு செய்திருந்தது.


மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் அதன் பயிற்சி நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக "தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை 2025 ஜனவரி 8 அன்று 4 வது இலங்கை பீரங்கிப் படையணியில் ஏற்பாடு செய்தது.