பயிற்சி

53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) கட்டளையின் கீழுள்ள படையலகுகளின் சிறப்பாக பயிற்சி பெற்ற பிரிவு, 2025 ஜூலை 14, தொடக்கம் 2025 ஜூலை 18 வரை அம்பு முனை சவால் 2025 - போர் தயார்நிலை போட்டியில் போட்டியிடுகிறது.


மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் இராணுவ உடற்கல்விப் பயிற்சிப் பாடசாலையின் உள்ளக மைதானத்தில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 'தொற்றா நோய்களைக் குறைத்தல்' என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை 2025 ஜூலை 09 அன்று ஏற்பாடு செய்தது.


கணக்காய்வு அவதானிப்புகளைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வு பட்டறை 22 வது காலாட் படைப்பிரிவில் 2025 ஜூன் 26 முதல் 2025 ஜூன் 29 வரை நடாத்தப்பட்டது.


மன ஆரோக்கியம் மற்றும் திருப்திகரமான வாழ்க்கை தொடர்பான விரிவுரையை இலங்கை சிங்கப் படையணி 2025 ஜூலை 03, அன்று இலங்கை சிங்க படையணி வளாகத்தில் நடத்தியது.


இராணுவ உள்ளக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான இரண்டு நாள் பட்டறை 2025 ஜூலை 02 அன்று மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.


மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் 32 அதிகாரிகளின் பங்கேற்புடன் பெற்ற இளம் அதிகாரிகள் பாடநெறி எண் 70 , 2025 ஜூன் 29 அன்று நிறைவடைந்தது.


விஷேட காலாட் நடவடிக்கை பாடநெறி எண் 77 இன் விடுகை அணிவகுப்பு 2025 ஜூன் 28 அன்று மாதுருஓயாவில் உள்ள இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.


இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் அதன் 21 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பதுரலிய பாலிந்தநுவர பிரதேச செயலக அதிகாரிகளுக்கு ‘தூய இலங்கை’ திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 2025 ஜூன் 23 ம் திகதியன்று நடத்தியது.


பனகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையின் 2025 ஆம் ஆண்டின் முதலாவது பாடத்திட்டத்தின் பட்டமளிப்பு விழா 2025 ஜூன் 19 ஆம் திகதி பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.


இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டி.டி.பீ. சிறிவர்தன அவர்களின் கருத்தின் கீழ் 2025 ஜூன் 18 ஆம் திகதி "இராணுவ உறுப்பினராக நடந்து கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்த அமர்வை தொழில்முறை ஆலோசகர் லெப்டினன் கேணல் கே.ஏ. முத்தலிப் (ஓய்வு) நடாத்தினார்.