பயிற்சி

சமீபத்திய ஆண்டுகளில், நிகழ்நிலை சூதாட்டம் மற்றும் விளையாட்டு அதன் வசதி மற்றும் அணுகுதல் காரணமாக பிரபலமடைந்து வருகிறது. இருப்பினும், இது சமூகத்திற்கு பல ஆபத்துகளையும் தீங்குகளையும் ஏற்படுத்துகின்றது. சமகால சூழலில் இது இராணுவ வீரர்களிடையே பரவலாகப் பரவி வருகிறது. இந்த ஆபத்தை சரியான நேரத்தில் உணர்ந்த இலங்கை இராணுவ தொண்டர் படையணி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நிகழ்நிலை சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளின் விளைவுகள் குறித்த விரிவுரையை ஏற்பாடு செய்திருந்தது.


மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் அதன் பயிற்சி நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக "தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை 2025 ஜனவரி 8 அன்று 4 வது இலங்கை பீரங்கிப் படையணியில் ஏற்பாடு செய்தது.


அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பதிலளிப்பு பயிற்சி பாடநெறி எண் 13 மற்றும் இடைநிலை உயிர்காக்கும் பாடநெறி எண். 06 கம்பளை இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் 26 டிசம்பர் 2024 அன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது.