
சமீபத்திய ஆண்டுகளில், நிகழ்நிலை சூதாட்டம் மற்றும் விளையாட்டு அதன் வசதி மற்றும் அணுகுதல் காரணமாக பிரபலமடைந்து வருகிறது. இருப்பினும், இது சமூகத்திற்கு பல ஆபத்துகளையும் தீங்குகளையும் ஏற்படுத்துகின்றது. சமகால சூழலில் இது இராணுவ வீரர்களிடையே பரவலாகப் பரவி வருகிறது. இந்த ஆபத்தை சரியான நேரத்தில் உணர்ந்த இலங்கை இராணுவ தொண்டர் படையணி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நிகழ்நிலை சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளின் விளைவுகள் குறித்த விரிவுரையை ஏற்பாடு செய்திருந்தது.