பயிற்சி

குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை நடாத்திய, படையலகு பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.51 யை 2025 ஜூன் 18 ஆம் திகதி குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் லெப்டினன் கேணல் டி.பி. ராஜசிங்க நினைவு மண்டபத்தில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.


அனுராதபுரம் 21 வது காலாட் படைப்பிரிவு நீச்சல் தடாகத்தில் அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண் 24 வெற்றிகரமாக நிறைவடைந்தது.


நடவடிக்கைகள் பணிப்பகத்தின் கீழ் "தூய இலங்கை" திட்டத்தின் கேணல் ஒருங்கிணைப்பாளர் கேணல் எம்.என். குணவர்தன பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூன் 03 ஆம் திகதி ஒருகொடவத்தை சிவில் நிர்வாக பணிப்பகத்தில் தேசிய "தூய இலங்கை" கருத்து குறித்த விரிவுரையை நடத்தினார். இராணுவத்தின் 71 சிவில் ஊழியர்கள் இந்த விரிவுரையில் பங்கேற்றனர்.


அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 55 வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 06 ஜுன் 2025 அன்று நடைபெற்றது.


மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தினருடன் இணைந்து மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான பாடநெறி இலக்கம் 30 இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 ஜூன் 05 முதல் ஜூன் 04 வரை ந்த்தப்பட்டது.


இந்திய இராணுவ நடமாடும் பயிற்சி குழுவால் 2025 மே 5 முதல் ஜூன் 3 வரை பனாகொடை ரணவிரு தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் உயர் சைபர் பாதுகாப்பு பயிற்சி திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சமகால சைபர் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான ஆழமான தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவை வழங்குவதன் மூலம் இலங்கை ஆயுதப் படைகளின் சைபர் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டமையப்பட்டிருந்தது.


ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், 2025 மே 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் 24 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் படையினருக்கு 'திருப்தியடைந்த மற்றும் துணிச்சலான இராணுவம்' என்ற தலைப்பில் பட்டறை நடாத்தப்பட்டது.


21, 54, 56 மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவுகளின் கீழ் உள்ள படையலகுகளின் படையினருக்காக, 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி.பீ. விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 54 வது காலாட் படைப்பிரிவில் 2025 மே 20 முதல் 22 வரை மூன்று நாள் புகைப்படப் பட்டறை நடாத்தப்பட்டது.


இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, 06 அதிகாரிகள் மற்றும் 06 சிப்பாய்களை கொண்ட மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் குழுவிற்கு, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 மே 08 முதல் 09 வரை அதுருகிரிய ஓடிபி (OBD) கல்வியற் கல்லூரியில் வாகன ஸ்கேனிங் மற்றும் பிரச்சினைகளை கண்டறிதல் குறித்த இரண்டு நாள் பட்டறையை நடாத்தியது.


தொற்றாத நோய்கள் தொடர்பான விரிவுரை 2025 மே 01 ம் திகதி அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது. இந்த விரிவுரையை இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் கெப்டன் ஜீஏ ராஜபக்ஷ நிகழ்த்தினார். இவ் விழிப்புணர்வு கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர்களிடையே விழிப்புணர்வையும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.