பயிற்சி

21, 54, 56 மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவுகளின் கீழ் உள்ள படையலகுகளின் படையினருக்காக, 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி.பீ. விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 54 வது காலாட் படைப்பிரிவில் 2025 மே 20 முதல் 22 வரை மூன்று நாள் புகைப்படப் பட்டறை நடாத்தப்பட்டது.


இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, 06 அதிகாரிகள் மற்றும் 06 சிப்பாய்களை கொண்ட மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் குழுவிற்கு, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 மே 08 முதல் 09 வரை அதுருகிரிய ஓடிபி (OBD) கல்வியற் கல்லூரியில் வாகன ஸ்கேனிங் மற்றும் பிரச்சினைகளை கண்டறிதல் குறித்த இரண்டு நாள் பட்டறையை நடாத்தியது.


தொற்றாத நோய்கள் தொடர்பான விரிவுரை 2025 மே 01 ம் திகதி அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது. இந்த விரிவுரையை இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் கெப்டன் ஜீஏ ராஜபக்ஷ நிகழ்த்தினார். இவ் விழிப்புணர்வு கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர்களிடையே விழிப்புணர்வையும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.


மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் 29 அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி - 88 (2025/I) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 29 அன்று நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் காலாட்படை பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் எம்டபிள்யூஎஸ் மில்லகல ஆர்டபீள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


கனிஸ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் - 106 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 10 அன்று அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகம், மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உயிரி மருத்துவ எரிவாயு அமைப்பின் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை 2025 ஏப்ரல் 22 அன்று நாரஹேன்பிட்டா மருத்துவமனையில் நடாத்தியது.


21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விரிவுரை 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி 21 வது காலாட் படைப்பிரிவு கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.


வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 வது காலாட் படைப்பிரிவில் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண் 23 வெற்றிகரமாக நிறைவடைந்தது.


இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில், ஐக்கிய நாடுகள் பணிக்கான தையல்காரர்கள் மற்றும் வான்வழி மருத்துவ குழுவிற்கான முன் பயிற்சி பாடநெறி 2025 மார்ச் 27, அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.


வன்னி பாதுகாப்பு படை தலைமையக சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்துடன் இணைந்து, 2025 ஜனவரி 15 ஆம் திகதி தலைமையக கேட்போர் கூடத்தில் பெண்களின் உரிமைகள் தொடர்பான கல்வி செயலமர்வினை நடத்தியது.