பயிற்சி

இலங்கை இராணுவம் ரஷ்ய-இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாய பயிற்சியின் மூன்றாவது திட்டமிடல் மாநாட்டை ரஷ்ய இராணுவ பிரதிநிதிகளுடன் 2025 ஓகஸ்ட் 05, அன்று காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தியது.


இராணுவ வீரர்களிடையே தலைமைத்துவத் திறன் முடிவு எடுபதில் மனித திறன்களை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, 'மனித காரணி' குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு 2025 ஆகஸ்ட் 01 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வு இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் ஜெனரல் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.


2025 ஏப்ரல் 28 முதல் ஓகஸ்ட் 01 வரை மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடத்தப்பட்ட கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனப்போர் யுத்திகள் அதிகாரிகள் பாடநெறி எண்-35, வெற்றிகரமாக நிறைவடைந்தது.


மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கு மூன்று நாள் பட்டறை 2025 ஜூலை 29 முதல் 31 வரை மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் நடைபெற்றது.


ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், 21, 54 மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவுகளின் படையினருக்காக வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 2025 ஜூலை 30, அன்று "திருப்தி மற்றும் துணிச்சலான இராணுவம்" என்ற தலைப்பில் விரிவுரை நடத்தப்பட்டது.


"போர்வீர இலக்கியத்தின் மூலம் போர்வீரர்களின் அபிலாஷைகள்" என்ற தலைப்பில் ஒரு விரிவுரை 2025 ஜூலை 23 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பக கேட்போர்க் கூடத்தில் நடத்தப்பட்டது.


சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு 2025 ஜூலை 24 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ ஒழுக்க பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.


இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க அடையாளமாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் 2025 ஜூன் 30, அன்று இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலைக்கு வெடிபொருள் அகற்றல் பயிற்சி உபகரணங்களின் ஒரு தொகுதியை அதிகாரப்பூர்வமாக நன்கொடையாக வழங்கியது.


இராணுவ நலன்புரி நிதி பணிப்பகம், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம், முதலாம் படை மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் ஆகியவற்றில் தொடர்ச்சியான விழிப்புணர்வு விரிவுரைகளை நடாத்தியது.


அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் ‘தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி’ பாடநெறி – 60, போர்ப் பயிற்சிப் பாடசாலையில் 2025 ஜூலை 17 ஆம் திகதி நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.