பயிற்சி

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 57 வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 28 ஒக்டோபர் 2025 அன்று நடைபெற்றது.


மின்பணியாளர், தட்சன் (கட்டிடம்) மற்றும் மேசன் (கொத்தனர்) ஆகியோருக்கான தேசிய தொழிற் தகைமை நிலை III சான்றிதழ்கள் வழங்கும் விழா, இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலை தளபதி கேணல் ஜே.ஏ.சி.எஸ். ஜகோட பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில், 17 ஒக்டோபர் 2025 அன்று இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலையில் நடைபெற்றது.


‘ஆயுதப் படை உறுப்பினர்களிடையே உளவியல் ஆரோக்கியம் மற்றும் தற்கொலை முயற்சிகளைத் தடுத்தல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் செயலமர்வு 2025 ஒக்டோபர் 21 முதல் 23 வரை கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தில் நடத்தப்பட்டது.


வான் தாக்குதல் பாடநெறி எண்: 30 இன் பயிற்சி நிறைவு அணிவகுப்பு 2025 ஒக்டோபர் 15 ஆம் திகதி ஏயர்மொபைல் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.


திட்ட பணிப்பகம் அதன் அதிகாரிகளுக்கு "துல்லியமான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் உருவாக்குதல்" என்ற தலைப்பில் ஒரு பட்டறையை இராணுவத் தலைமையக பல்லூடக மண்டபத்தில் 2025 ஒக்டோபர் 17 ஆம் திகதி நடாத்தியது.


பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் எல்ல-வெல்லவாய வீதியில் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சி 2025 ஒக்டோபர் 16 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2025 செப்டம்பர் 04 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தைத் தொடர்ந்து, எதிர்கால அவசரகால நடவடிக்கைகளுக்கான தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சி நிஜ வாழ்க்கை மீட்பு நடவடிக்கையின் பகுப்பாய்வு கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.


மித்ர சக்தி (XI) 2025 பயிற்சி இந்தியாவின் பெல்காவியில் 2025 நவம்பர் 9 முதல் நவம்பர் 23 வரை நடைபெற உள்ளது. அதற்கமைய பங்கேற்கும் குழுவினருக்கான முன் பயிற்சி பாடநெறி நிகாவேவாவில் உள்ள ஏயர் மொபைல் பயிற்சி பாடசாலையில் ஆரம்பமாகியதுடன், இதில் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.


இலங்கை இராணுவ உள்ளக விவகாரப் பிரிவு, இராணுவத் தலைமையகத்தின் அனைத்து கிளைகள் மற்றும் பணிப்பகங்களை சேர்ந்த இராணுவ வீரர்களின் பங்கேற்புடன், இராணுவத் தலைமையகத்தில் 2025 ஒக்டோபர் 07 அன்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடாத்தியது.


வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2025 ஒக்டோபர் 01 ஆம் திகதி பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் தொற்றா நோய்கள் பற்றிய விரிவுரையை நடாத்தியது.


இராணுவ கொள்முதல் தொடர்பான சுங்க நடைமுறைகள் குறித்த சிறப்பு விரிவுரை இராணுவ தலைமையகத்தில் திட்ட பணிப்பகத்தால் 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.