பயிற்சி

மிஹிந்து செத் மெதுர நல விடுதியில் உள்ள போர் வீரர்கள் மற்றும் ஊழியர்களின் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் 2026 பெப்ரவரி 11 ஆம் திகதி நலவிடுதியில் ஒரு சிறப்பு ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.


பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பீ. அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போர்வீரர் முன்முயற்சித் திட்டம் குறித்த முதற்கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாதுகாப்பு அமைச்சு, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து 2026 பெப்ரவரி 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடாத்தியது.


தென் சூடான் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் நிலை இரண்டு மருத்துவமனைக்கான முன்-பணியமர்த்தல் பயிற்சி எண் 13 ஆனது 2026 ஜனவரி 30 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவடைந்தது.


உள்ளக கணக்காய்வு பணிப்பகம், "மூலோபாய பயிற்சி திட்டங்கள் மூலம் உள்ளக மேற்பார்வையை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் மூலோபாய திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை 2026 ஜனவரி 22 மற்றும் 23 ம் திகதிகளில் இராணுவத் தலைமையகத்தில் நடாத்தியது.


"ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்" திட்டத்தின் கீழ், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில், தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2026 ஜனவரி 30 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி எண் 103 (2025/II) 2026 ஜனவரி 27, அன்று மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.


கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான புத்துணர்ச்சியூட்டும் பட்டறை 2026 ஜனவரி 19 முதல் 24 வரை நிகவெவ ஏயர்மொபைல் பயிற்சிப் பாடசாலையில் 10 அதிகாரிகள் மற்றும் 53 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


பனாகொடை விளையாட்டு மேம்பாட்டு மற்றும் முகாமைத்துவ நிலையத்தின் கேட்போர் கூடத்தில், இராணுவ விளையாட்டு வீரர்களுக்காக விளையாட்டின்போது ஏற்படும் காயங்களைத் தடுப்பது தொடர்பான பயிற்சி பட்டறை 2026 ஜனவரி 20 அன்று நடத்தப்பட்டது.


விஷேட காலாட் படை நடவடிக்கை பாடநெறி எண் 78 இன் விடுகை அணிவகுப்பு 2026 ஜனவரி 19 அன்று மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இந்தப் பாடநெறி 2025 ஜூலை 11 முதல் 2026 ஜனவரி 19 வரை நடைபெற்றது.


பனாகொடை இராணுவ உடற் பயிற்சிப் பாடசாலையில் டேக்வாண்டோ பயிற்சி வெற்றிகரமாக 2026 ஜனவரி 08 அன்று நடாத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை லிவிங் வெல் டேக்வாண்டோ கல்லூரியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிராண்ட் மாஸ்டர் டெரெக் சம்னர் தலைமையில், இங்கிலாந்து பயிற்றுனர்கள் நடாத்தினர். இது இராணுவ டேக்வாண்டோ விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பெறுமதியான தொழில்நுட்ப, தந்திரோபாய மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவத்தை வழங்கியது.