செய்தி சிறப்பம்சங்கள்

2025 செப்டம்பர் 04 அன்று இராவணன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் இடம் பெற்ற பேருந்து விபத்தில் அசாதாரண துணிச்சலுடன் மூன்று பேரை மீட்கும் செயலில் ஈடுபட்ட, 2 வது விசேட படையணியின் கோப்ரல் டபிள்யூஎம்விஎம் பண்டார அவர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 செப்டெம்பர் 16 ம் திகதி அன்று கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் பாராட்டினார்.


இலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயல் திட்டத்திற்கு இணங்க, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை இராணுவத்தின் உள்ளக விவகார பிரிவுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 12 அன்று கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையக கேட்போர் கூடத்தில் ஒரு நாள் ஊழல் எதிர்ப்புப் பயிற்சித் திட்டத்தை நடத்தியது.


2025 செப்டம்பர் 13, அன்று மிஹிந்து செத் மெதுரவில் சிறப்பு சக்கர நாற்காலி நன்கொடை திட்டம் நடைபெற்றது, இது மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அறக்கட்டளையுடன் இணைந்து முன்னாள் படைவீரர் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் நடத்தப்பட்டது.


இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் பிரதிநிதிகள் குழு, வீரமரணம் அடைந்த அனைத்து போர் வீரர்களையும் நினைவுகூரும் வகையில் எதிர்வரும் பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு 2025 செப்டெம்பர் 12 ஆம் திகதி தளபதியின் அலுவலகத்தில் பொப்பி மலர் அணிவித்தது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 செப்டெம்பர் 10 ஆம் திகதி கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.


2025 செப்டம்பர் 11 ஆம் திகதி சாலியபுர கஜபா சூப்பர் குரோஸ் பாதையில் நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள் மோட்டார் பந்தய சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவம் அனைத்திலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.


போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், ‘இராணுவத்திலிருந்து சிவில்’ சேவைக்கு’ எனும் சிவில் வாழ்க்கைக்காக சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளை தயார்படுத்தல் மற்றும் வலுவூட்டும் நிகழ்ச்சியை 2025 செப்டெம்பர் 09 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடாத்தியது.


12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டீ.டப்ளியூ. வித்தியானந்த ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 செப்டம்பர் 09 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2025 செப்டம்பர் 07 ஆம் திகதி பனாகொடை ஸ்ரீ போதிராஜாராமய விகாரையில் பினர பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த மத நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார்.


2 வது விஷேட படையணியின் கடமையில் இல்லாது விடுமுறையில் இருந்த லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.எம்.வீ.எம் பண்டார, நேற்று மாலை (04) எல்ல-வெல்லவாய வீதியில் ராவணன் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட போதிலும், தனது துணிச்சலை வெளிப்படுத்தி மூவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.