செய்தி சிறப்பம்சங்கள்

2025 மே 28 அன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் அதிகாரவாணையற்ற அதிகாரி II கலிங்க குமாரகே 45.55 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது இலங்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


வடமத்திய மாகாணத்தில் வசிக்கும் முன்னாள் போர் வீரர்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், அனுராதபுரம் அபிமன்சல 1 நலவிடுதியில் 2025 மே 27 ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் சேவையிலுள்ள இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.


இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டி.சீ. பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள், 2025 மே 26 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


கொழும்பு கிராண்ட் மைட்லேண்ட் விடுதியில் இன்று (மே 23) இடம்பெற்ற இராணுவ விளையாட்டு பேரவையின் பொதுச் சபை மற்றும் 80 வது மாநாட்டின் நிறைவு விழாவிற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) அவர்கள் தலைமை தாங்கினார்.


1 வது இலேசாயுத காலாட் படையணியின் 75 வது ஆண்டு வரலாற்று நூல் - மூன்றாம் தொகுதி 2025 மே 21 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் வைபவ ரீதியாக வெளியிடப்பட்டது.


வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர அவர்களின் தலைமையிலான இலங்கைக் குழு, 2025 மே 13 தொடக்கம் 14 வரை ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் அமைச்சர்கள் கூட்டம் 2025 இல் பங்கேற்றது.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக வளாகத்தில் 2025 மே 12 ம் திகதி நன்கொடை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் ஹூவாய், ஹொனலுலுவில் 2025 மே 13 முதல் 15 வரை நடைபெற்ற தரைப்படை பசிபிக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி 2025 இல் சிறப்பு அதிதியாகப் பங்கேற்றார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மே 20 ம் திகதியன்று நடைபெற்ற விழாவில் இலங்கை இராணுவத்தின் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு முறையாகப் நிலை உயர்வு வழங்கினார். இந் நிகழ்வில் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 20 அன்று கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.