செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கைக்கான மாலைத்தீவின் பாதுகாப்பு ஆலோசகரும், ஆவுஸ்திரேலியாவிற்கு அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகருமான கேணல் ஹசன் அமீர், இன்று (ஏப்ரல் 10) காலை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தனது 144 வது ஆண்டு நிறைவை 2025 ஏப்ரல் 01 அன்று மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பெருமையுடன் கொண்டாடியது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 08 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் படையணிகளுக்கு இடையிலான கரப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2025 மார்ச் 28 ஆம் திகதி பனாகொட இலங்கை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.


இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஆர்) பாஹீம்-உல்-அஸீஸ், ஹிலால்-ஐ-இம்தியாஸ் (இராணுவம்), கொழும்பு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது பாரூக் ஆகியோர் இன்று (ஏப்ரல் 08) மதியம் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.


35 வருட கால சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் கேஎம்என் குலசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.


கம்புருபிட்டிய அபிமன்சல - II நல விடுதியில் 2025 ஏப்ரல் 06 ம் திகதி நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.


மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசரகால நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக முப்படையினரின் குழுவொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2025 ஏப்ரல் 05 அன்று புறப்பட்டது.


பாதுகாப்பு சேவைகள் டென்னிஸ் போட்டி – 2025ல் பரிசு வழங்கும் விழா 2025 ஏப்ரல் 04 அன்று நாரஹேன்பிட்டி இராணுவ டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை இராணுவ டென்னிஸ் குழுவினால் முப்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களின் பங்குபற்றுதலுடன் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


புதிய விமானப்படைத் தளபதி, ஏயர் மார்ஷல் வி.பி. எதிரிசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூவீ ஆர்எஸ்பீ மற்றும் மூன்று பார்கள் யூஎஸ்பீ எப்என்டியூ (சீனா) பீஎஸ்சி கியூஎச்ஐ 2025 ஏப்ரல் 04 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.