இராணுவ சிறப்பம்சம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர், வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 2025 ஜூன் 21 ஆம் திகதி சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.


மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பொறியியல் படையணியில் 24 வது படைத் தளபதியாக 2025 ஜூன் 23, அன்று பனாகொடை படையணி தலைமையத்தில் இராணுவ சம்பிரதாயத்திற்கமைய கடமை பொறுப்பேற்றார்.


பிரிகேடியர் ஏ.கே. பீரிஸ் ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத் தலைமையகத்தில் திட்டமிடல் பணிப்பகத்தின் 29 வது பணிப்பாளராக 2025 ஜூன் 24 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் ஜீ.பீ.பீ. குலதிலக்க என்டிசீ அவர்கள் 23 வது காலாட் படைப்பிரிவின் 29 வது தளபதியாக 2025 ஜூன் 23 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.


23 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெளிச்செல்லும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபாத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு 2025 ஜூன் 21 ஆம் திகதி23 வது காலாட் படைப்பிரிவில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.


மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 23 ஆம் திகதி புத்தள இராணுவப் போர் கல்லூரியின் தளபதியாக கடமைப் பொறுப்பேற்றார்.


பனகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையின் 2025 ஆம் ஆண்டின் முதலாவது பாடத்திட்டத்தின் பட்டமளிப்பு விழா 2025 ஜூன் 19 ஆம் திகதி பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.


விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் கே.எல்.ஐ கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2025 ஜூன் 17 அன்று மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக 2025 ஜூன் 12 ஆம் திகதி 12 வது படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் எம்டபிள்யூஏஆர்சீ விஜேசூரிய ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 21வது காலாட் படைப்பிரிவின் 43 வது தளபதியாக 2025 ஜூன் 13 ம் திகதியன்று 21 வது காலாட் படை தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.