இராணுவ சிறப்பம்சம்

இலங்கை சமிக்ஞை படையணியில் "மின்னணு பாதுகாத்தல்" என்ற கருப்பொருளின் கீழ், 2025 செப்டம்பர் 12 அன்று பனாகொடை இலங்கை சமிக்ஞை படையணியில் அதிகாரிகள் உணவகத்தில் 9வது இலங்கை சமிக்ஞை படையணி மற்றும் 2வது சமிக்ஞை பிரிகேட்டுடன் இணைந்து ஏற்பாடு செய்த சைபர் பாதுகாப்பு மற்றும் மின்னணு போர் தொடர்பான விரிவுரை நடாத்தப்பட்டது.


மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் 2025 செப்டெம்பர் 13 ஆம் திகதி மத்திய பாதுகாப்புப் படைகள் தலைமையக படையினரை சந்தித்து அவர்களுக்கான உரையின் போது எல்ல – வெல்லவாய பஸ் விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்ட படையினரை பாராட்டினார்.


மின்னேரியாவில் உள்ள 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினால் 2025 செப்டம்பர் 04 அன்று கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் உள்ள 16 படையலகுகளுக்கு மீள் புதுப்பிக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களை சம்பிரதாயபூர்வமாக படையலகு வளாகத்தில் கையளித்தது.


பிரிகேடியர் பி.ஏ.டி.ஆர்.ஏ.சீ விஜயசேகர ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ யூஎஸ்ஏசீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.


இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் ஆர்.ஆர்.எம்.பீ.என்.பி பம்பரதெனிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 10 அன்று இராணுவத் தலைமையகத்தில் பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் 40 வது பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.


மின்னேரியா காலாட் பயிற்சி நிலையம் தனது 41வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கொண்டாடியது. இந்நிகழ்வின் போது போர் வீரர்களின் நினைவுத் தூபியில் தளபதி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பும் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சி மற்றும் அனைத்து நிலையினருக்குமான இரவு விருந்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.


பிரிகேடியர் ஏ.கே.சீ.எஸ் டி சில்வா ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் 48 வது தளபதியாக 2025 ஆகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெற்ற விழாவின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.


தம்புள்ளை, இனாமலுவையை தலைமையிடமாகக் கொண்ட 53 வது காலாட் படைப்பிரிவு (அவசர கால தாக்குதல் படை), 2025 ஆகஸ்ட் 24 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் அதன் 30 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. இந்த நிகழ்வு 53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.டி கொடவத்த ஆர்டபிள்யூபீ ஆர்ஸ்பீ அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.


நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சு, தேசிய குண்டு செயலிழப்பு திட்டத்தின் திருத்திய இலங்கை குண்டு செயலிழப்பு நிறைவு மூலோபாயத்தை (2025-2027) 2025 ஆகஸ்ட் 28 ஆம் திகதி பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அறிமுகப்படுத்தியது.