55 வது காலாட் படைப்பிரிவின் 29 வது ஆண்டு நிறைவு விழா 2025 டிசம்பர் 15 அன்று கிளிநொச்சியில் கொண்டாடப்பட்டது.
தேசத்தின் பாதுகாவலர்
55 வது காலாட் படைப்பிரிவின் 29 வது ஆண்டு நிறைவு விழா 2025 டிசம்பர் 15 அன்று கிளிநொச்சியில் கொண்டாடப்பட்டது.
மேஜர் ஜெனரல் எஸ்.பீ விக்ரமசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 29 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இலங்கை இராணுவ வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமை பொறுப்பேற்றார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் கருத்திற்கமைய, அபிமன்சல–1 நலவிடுதியின் தளபதி பிரிகேடியர் யூ.ஆர்.ஐ.பி. ரணதுங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் பேராசிரியர் நோர்பர்ட் ஆண்ட்ராடி அவர்களால் 2025 டிசம்பர் 23 ஆம் திகதி அனுராதபுரம் அபிமன்சல–1 நல விடுதியில் உள்ளவர்களுக்காக பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாத நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அபிமன்சல 3 நலவிடுதியில் 2025 டிசம்பர் 23 ஆம் திகதி நத்தார் தினம் கொண்டாடப்பட்டது.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை முழுவதும் உயிரியியல்மருத்துவ உபகரணங்களை பராமரித்து புதுமைப்படுத்துவதன் மூலம் இராணுவத்தின் செயல்பாட்டு தயார்நிலையை தொடர்ந்து உறுதி செய்கின்றனர்.
2025 டிசம்பர் 17 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் பிரிகேடியர் ஆர்.ஜீ.எல்.கே வீரகோன் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவ போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் 16வது படைத்தளபதியாக 2025 டிசம்பர் 18 அன்று இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் கே.எம்.ஜி பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 16, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 13 வது தலைமை சமிக்ஞை அதிகாரியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எம்.கே.ஜீ.கே வீரசேகர டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எயூஎஸ்டபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் விசேட படையணியின் 16 வது படைத் தளபதியாக 2025 டிசம்பர் 15, அன்று விசேட படையணி தலைமையகத்தின் கடமைகளை பொறுப்பேற்றார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்ட அமுலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கையின் போது, 2025 டிசம்பர் 17 ஆம் திகதி குறிப்பிடத்தக்க கைப்பற்றல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.