இராணுவ சிறப்பம்சம்

பிரிகேடியர் எஸ்.ஆர். ஹேவாபதிரண எல்எஸ்சீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 20வது சொத்து முகாமைத்துவ பணிப்பாளராக 2026 மார்ச் 10 அன்று மத அனுஷ்டானம் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், ரணவிரு செவன நல விடுதி நிலையம், மிஹிந்து செத் மெதுர மற்றும் அபிமன்சல 1, 2, மற்றும் 3 நல விடுதியிலுள்ள போர்வீரர்கள் கடற்படைத் தளபதியின் ஒப்புதலுடன், 2026 மார்ச் 04 ஆம் திகதி காலி தெற்கு கடற்படைத் தளத்திலிருந்து இலங்கை கடற்படைக் கப்பலான "லங்கா தேவி"யில் திமிங்கலத்தைப் பார்க்கும் சுற்றுப்பயணத்திற்காக கடற்படை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


ரம்பொட, கெரன்டிஎல்ல, வெவண்டன் வனப்பகுதியில் 2026 மார்ச் 07 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் காட்டுத் தீ 3வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் விரைவாக அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இராணுவத் தலைமையகத்தில் தர உத்தரவாதம் மற்றும் பரிசோதனை பணிப்பகத்தின் 10 வது பணிப்பாளராக பிரிகேடியர் பீ.டபிள்யூ.எம்.எம்.டி. விஜேரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 2026 மார்ச் 06 ஆம் திகதி நடைபெற்ற எளிமையான நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.


51 வது காலாட் படைப்பிரிவு வரலாற்று சிறப்புமிக்க நாகதீப புராண ராஜமஹா விகாரையில் 2026 மார்ச் 01 ஆம் திகதி ஒரு தான நிகழ்வை நடாத்தியது.


இராணுவத் தளபதியின் எண்ணகருவிற்கமைய, ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் முதலாம் படை படையினரால் 2026 பெப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இலங்கை இராணுவத்தின் 77 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “நெலும் பியச” கேட்போர்கூடத்தில் “கோர்ப்ஸ் கிரியேட்டர்ஸ் எக்ஸ்போ” என்ற கருப்பொருளின் கீழ் ஒரு புத்தாக்க போட்டி நடத்தப்பட்டது.


57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.வீ. கொடிதுவக்கு என்டியூ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி அதன் தலைமையக வளாகத்தில் 57 வது காலாட் படைப்பிரிவு தனது 19 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.


இராணுவப் புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வெலிகம பொலிசாருடன் இணைந்து மாத்தறை மாவட்டத்தின் வெலிப்பிட்டி பிரதேச செயலகப் பகுதியில் 2026 பெப்ரவரி 24 அன்று கூட்டுச் சோதனை நடத்தப்பட்டது.


இராணுவப் புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 2026 பெப்ரவரி 25 அன்று கோனஹேன விசேட அதிரடி படை அதிகாரிகளுடன் இணைந்து ஒரு சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது, கிருலப்பனை பகுதியில் பலபொகுன வீதி சிறுவர் பூங்காவில் 05 கிலோ ஹஷிஷ் மற்றும் ஒரு ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலங்கை இராணுவத்தின் 17 வது ஒழுக்க பணிப்பாளராக பிரிகேடியர் எச்.ஏ.எச்.சி. அல்விஸ் யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையகத்தில் 2026 பெப்ரவரி 16 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.