22nd November 2025
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.என்.கே. பெரேரா அவர்கள் 2025 நவம்பர் 21 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தளபதிக்கு, 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் குழுப்படம் எடுத்து கொண்டார்.
அவரது புதிய பதவிக்கு ஆசிகள் வேண்டி மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலின் கீழ் மத அனுஷ்டானங்கள் நடத்தப்பட்டன. பின்னர் அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் படைப்பிரிவின் முன்னேற்றத்திற்கான தனது தொலைநோக்கு மற்றும் எதிர்பார்ப்புகளை கோடிட்டுக் காட்டினார்.
அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய சம்பிரதாயங்கள் நிறைவடைந்தன. அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.