இராணுவ சிறப்பம்சம்

இராணுவ புலனாய்வுப் படையினரும், நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து 2025 ஜூன் 15 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வல்வெட்டித்துறை பொலிகண்டி கடற்கரையில் சுமார் ரூ.400 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது.


போசன் பௌர்ணமி தினத்தை நினைவுகூரும் வகையில், அபிமன்சலவின் தளபதி பிரிகேடியர் ஆர்.ஜீ.எல்.கே. வீரகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கம்புருபிட்டிய அபிமன்சல II நல விடுதியில் சிறப்பு ஆன்மீக மற்றும் நல்வாழ்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இந்த முயற்சி, உள்நாட்டு போர் வீரர்களின் ஆன்மீக மற்றும் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், அவர்களின் தொடர்ச்சியான மறுவாழ்வு பயணத்தை ஆதரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டிருந்தது.


இலங்கை இராணுவ சேவைப் படையணியின் மேஜர் ஜெனரல் ஈ.எம்.ஜீ.ஏ. அம்பன்பொல அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய உபகரண பணிப்பாளர் நாயகமாக 2025 ஜூன் 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.


சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, பலாங்கொடை ராஜாவாக்க மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டிடங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் பலாங்கொடை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து விழுந்த மரங்களை அகற்றி பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தனர்.


கெந்தலந்த அதிகாரிகள் திருமண விடுதி வளாகத்தில் வசிக்கும் அதிகாரிகளின் குடும்பத்தினர் 2025 ஜூன் 11, அன்று கந்லந்த அதிகாரி திருமண விடுதி வளாகத்தின் முன் ஐஸ்கிரீம் மற்றும் தேநீர் தானம் வழங்கினர்.


54வது காலாட் படைப்பிரிவின் படையினர், அதன் கீழ் உள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுடன் இணைந்து 54வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 2025 ஜூன் 10 முதல் 12 வரை தல்லடி சந்தி அருகே மன்னார் பொசன் வலயம் 2025 யை ஏற்பாடு செய்திருந்தனர்.


இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் தம்புள்ளை பொருளாதார நிலைய உறுப்பினர்களுடன் இணைந்து, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூன் 10, அன்று தம்புள்ளை பொருளாதார நிலைய வளாகத்தில் அன்னதானம் வழங்கினர்.


பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தினால் 2025 ஜூன் 10 ம் திகதி ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரை வளாகத்தில் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்ஏடி அரியசேன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மரவள்ளிக்கிழங்கு அவியல் தானம் வழங்கப்பட்டது.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, இலங்கை இராணுவ பௌத்த சங்கத்துடன் இணைந்து 2025 ஜூன் 10 ம் திகதி அன்று பனாகொடை ஸ்ரீ மஹா போதிராஜராமையில், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 'சீல சமாதி' நிகழ்வு ஏற்பாடுடன் பொசன் பௌர்ணமி தினத்தைக் கொண்டாடியது.