இராணுவ சிறப்பம்சம்

தித்வா சூறாவளியைத் தொடர்ந்து அனர்த்த நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடியாக ஒன்றிணைக்கப்பட்ட மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் பிரிவுகளின் படையினர் ஆற்றிய முன்மாதிரியான சேவையைப் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் பாராட்டினார். 2025 டிசம்பர் 17 அன்று பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இந்தப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 25 வது போர் கருவி பணிப்பாளர் நாயகமாக இராணுவ தலைமையகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.


பிரிகேடியர் டி.ஐ.எஸ். ஜயசிங்க என்டிசி பீஎஸ்சீ அவர்கள் இராணுவ வழங்கல் கல்லூரியின் 12 வது தளபதியாக 2025 டிசம்பர் 15 அன்று மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


பிரிகேடியர் ஆர்.எம்.சி. ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள் இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகத்தின் 41 வது பணிப்பாளராக 2025 டிசம்பர் 11 அன்று இராணுவ தலைமையகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகெட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இராணுவ புலானாய்வு படையணியின் படைத்தளபதியாக 2025 டிசம்பர் 06 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.


ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக, ஜெர்மன் கூட்டமைப்பு ஆயுதப் படைகளைச் சேர்ந்த ஐக்கிய நாடுகளின் நடமாடும் பயிற்சிக் குழு, 2025 டிசம்பர் 01 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டது.


இலங்கை சமிக்ஞை படையணியின் 19 வது படைத்தளபதியாக பிரிகேடியர் கே.எம்.ஜி. பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 2025 டிசம்பர் 01, அன்று இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.


11 வது காலாட் படைப்பிரிவினால், வெளிச்செல்லும் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டீ.சீ.எம்.ஜீ.எஸ்.டீ. குரே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் ஒரு சம்பிரதாய நிகழ்வை 2025 டிசம்பர் 05 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.


விஷேட படையணியின் மேஜர் ஜெனரல் எம்.பீ.கே.எல். அமரசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 12 வது காலாட் படைப்பிரிவின் 21 வது தளபதியாக 2025 டிசம்பர் 04 ஆம் திகதி 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.


சிறுநீரகம், புற்றுநோய் மற்றும் தலசீமியா நோயாளிகளுக்கு இரத்தப் பற்றாக்குறை நிலவுவது குறித்து அனுராதபுரம் இரத்த வங்கியின் அவசர கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, 21 வது காலாட் படைப்பிரிவு உடனடியாக நடமாடும் இரத்த தான திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.