இராணுவ சிறப்பம்சம்

24 வது காலாட் படைப்பிரிவின் 17 வது தளபதியாக மேஜர் ஜெனரல் கே.டபிள்யூ ஜயவீர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 26 ஆம் திகதி 24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.


51 வது காலாட் படைப்பிரிவு அதன் 30 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஆகஸ்ட் 23 ஆம் திகதி அதன் தலைமையகத்தில், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.


பிரிகேடியர் சி.டி. விக்ரமநாயக்க டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 22 வது பிரதம களப் பொறியியலாளராக 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


1987 – 1990 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் எல்ரீரீ பயங்கரவாத்திற்கு எதிராகப் போராடிய இந்திய அமைதி காக்கும் படையில் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பலாலி இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் எஸ். விஜேசிரிவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையக போக்குவரத்து பணிப்பகத்தின் 34 வது பணிப்பாளராக 2025 ஆகஸ்ட் 14 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார்.


கஜபா படையணி, அதன் ஸ்தாபக தந்தையான மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் 33 வது நினைவு தினம் படையணி படைத்தளபதியும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்பு மற்றும் ஆதரவுடன் 2025 ஆகஸ்ட் 8 ஆம் திகதி கொண்டாட்டப்பட்டது.


இலங்கை இராணுவத்தின் உள்ளக விவகார பிரிவு, ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் நிறுவனத்திற்குள் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, 2025 ஏப்ரல் 01 அன்று நிறுவப்பட்டதுடன், அதன் இரண்டாவது முன்னேற்ற ஒருங்கிணைப்பு மாநாடு இன்று (2025 ஆகஸ்ட் 12) இராணுவ பதவி நிலை பிரதானி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமண்டா ஜான்ஸ்டன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் கிறிஸ் போவ்லர் அவர்களுடன் இணைந்து, எம்பிலிப்பிட்டிய இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலைக்கு 2025 ஆகஸ்ட் 11 ஆம் திகதி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டனர்.


கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.டீ. கொடேவத்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) 33 வது தளபதியாக 2025 ஆகஸ்ட் 08 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 33வது நினைவு தினம் 2025 ஆகஸ்ட் 08 அன்று அனுராதபுரம் டென்சில் கொப்பேகடுவ நினைவுச் தூபியில் நடைபெற்றது.