இராணுவ உள்ளக விவகாரப் பிரிவினால் விழிப்புணர்வு நிகழ்வு

இலங்கை இராணுவ உள்ளக விவகாரப் பிரிவு, இராணுவத் தலைமையகத்தின் அனைத்து கிளைகள் மற்றும் பணிப்பகங்களை சேர்ந்த இராணுவ வீரர்களின் பங்கேற்புடன், இராணுவத் தலைமையகத்தில் 2025 ஒக்டோபர் 07 அன்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடாத்தியது.

இந்த திட்டம் நேர்மையை மேம்படுத்துதல், இலஞ்சத்திலிருந்து பரிசுகளை வேறுபடுத்துதல், வட்டி முகாமைத்துவம், ஊழல் அபாய மதிப்பீடு மற்றும் நிறுவன செயல் திட்டங்களைத் தயாரித்தல் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்தியது.

இந்த அமர்வை மேஜர் ஆர்.ஆர்.ஐ. ரொட்ரிகோ அவர்கள் பவர்பாயிண்ட் மூலம் விளக்கத்தினை வழங்கினார்.