விளையாட்டு

இலங்கை இராணுவ முய்தாய் தடகள வீரர்கள் 2025 ஜூன் 05 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் - 2025 இல் 17 தங்கப் பதக்கங்கள், 16 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 22 வெண்கலப் பதக்கங்களை பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக தமது வெற்றியை பதித்தனர்.


2025 ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் 22 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.


தென் கொரியாவின் குமியில் 2025 மே 27 முதல் 31 வரை நடைபெற்ற 26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் தமது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினர்.


2025 மே 28 அன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் அதிகாரவாணையற்ற அதிகாரி II கலிங்க குமாரகே 45.55 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது இலங்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் லெப்டினன் கேணல் யூ.வீ. சமிந்த புஷ்பசிறி அவர்கள் வெலிசர கடற்படை தலைமையகத்தில் 2025 மே 14 முதல் 18 வரை நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள் பூப்பந்து சாம்பியன்ஷிப் 2025 இல் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அவர் ஆண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் ஜோடி (50 வயதுக்கு மேற்பட்டவர்கள்) பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளார்.


இலங்கை கடற்படை நடாத்திய 13 வது பாதுகாப்பு சேவைகள் காற்பந்து போட்டியின் இறுதிப் போட்டி 2025 ஏப்ரல் 11 அன்று வெலிசர கடற்படை மைதானத்தில் நடைபெற்றது.


2025 ஏப்ரல் 09 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற 13வது பாதுகாப்பு சேவைகள் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில், இராணுவ விளையாட்டு கழகம், கடற்படை விளையாட்டு கழகம், விமானபடை விளையாட்டு கழகம் ஆகிய அணிகள் பங்கேற்ற தொடர்ச்சியான கடுமையான போட்டிகளுக்குப் பின்னர் இலங்கை இராணுவ ஆண்கள் ரக்பி அணி வெற்றி பெற்றது.


இராணுவ காற்பந்து குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2025 படையணிகளுக்கிடையிலான ஆண்கள் செபக்டக்ரா சாம்பியன்ஷிப் போட்டி 2025 மார்ச் 07 ஆம் திகதி பனாகொடை உள்ளக மைதானத்தில் 13 படையணிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தது. 13 படையணிகளின் அணிகளுக்கு இடையிலான தொடர்ச்சியான போட்டியின் பின்னர், விஜயபாகு காலாட் படையணியின் செபக்டக்ரா அணி மற்றும் இலங்கை இராணுவ இராணுவ பொலிஸ் படையணியின் செபக்டக்ரா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. விஜயபாகு காலாட் படையணியின் செபக்டக்ரா அணி 02 க்கு 00 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது.


இலங்கை இராணுவ தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது பாதுகாப்பு சேவைகள் வீதி ஓட்ட போட்டி - 2024/2025, இலங்கை இராணுவ தடகள குழு தலைவர் மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ பீஎஸ்சீ எச்டிஎம்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், பனாகொடை இராணுவ முகாமில் 2025 மார்ச் 23, அன்று நிறைவடைந்தது.


13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி 2025 பெப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் தியவன்னா படகோட்ட மையத்தில் இலங்கை இராணுவ படகோட்டக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.