இராணுவ ஸ்குவாஷ் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுகு இடையிலான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025, மத்தேகொடை இராணுவ முகாமில் 11 படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 185 ஆண் மற்றும் பெண் வீரர்களின் பங்கேற்புடன் 2025 ஒக்டோபர் 05 முதல் 15 வரை நடைபெற்றது.