விளையாட்டு

இராணுவ ஸ்குவாஷ் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுகு இடையிலான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025, மத்தேகொடை இராணுவ முகாமில் 11 படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 185 ஆண் மற்றும் பெண் வீரர்களின் பங்கேற்புடன் 2025 ஒக்டோபர் 05 முதல் 15 வரை நடைபெற்றது.


இந்தியா ரஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 முதல் 25 வரை நடைபெறவிருக்கும் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிக்கு 59 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழுவை தேசிய விளையாட்டு தேர்வுக் குழு அங்கீகரித்துள்ளது.


இராணுவ சதுரங்கக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான சதுரங்க சாம்பியன்ஷிப் 2025, இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் 2025 செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் 14 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 135 வீர வீராங்கனைகள் பங்கேற்றனர்.


இலங்கை இராணுவத்தின் பரா தடகள வீரரான கோப்ரல் நுவான் இந்திக்க கமகே 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற உலக பரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்தார்.


2025 செப்டம்பர் 18 முதல் 22 வரை மாலைத்தீவில் நடைபெற்ற முதலாவது காமன்வெல்த் கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப்பில், இலங்கையின் ஆண்கள் கடற்கரை கரப்பந்து அணி, இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது.


13 வது பாதுகாப்பு சேவைகள் தடகள சாம்பியன்ஷிப் 2025 செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க விழாவில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.


2025 செப்டம்பர் 11 ஆம் திகதி சாலியபுர கஜபா சூப்பர் குரோஸ் பாதையில் நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள் மோட்டார் பந்தய சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவம் அனைத்திலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.


2025 ஆண்டுக்கான படையணிகளுக்கிடையிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2025 செப்டம்பர் 01, 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் பனாகொடை இராணுவ உள்ளக அரங்கில் நடைபெற்றது.


இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இடைநிலை குத்துச்சண்டை போட்டி - 2025, கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக மைதானத்தில் 2025 ஆகஸ்ட் 18 முதல் 21 வரை இடம்பெற்றது. இப்போட்டியில் 20 விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 85 ஆண் மற்றும் 36 பெண் விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்றனர்.


2025 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் (சிரேஷ்ட/ கனிஷ்ட/ இளைஞர்) 2025 ஆகஸ்ட் 24 முதல் 28 வரை இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த முன்னணி பளுதூக்குபவர்கள் பங்கேற்றனர்.