படையணிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி 2025 செப்டம்பர் 20 முதல் 26 வரை நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி 2025 நவம்பர் 11 ஆம் திகதி பனாகொடை இராணுவ உள்ளக வளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தேசத்தின் பாதுகாவலர்
படையணிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி 2025 செப்டம்பர் 20 முதல் 26 வரை நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி 2025 நவம்பர் 11 ஆம் திகதி பனாகொடை இராணுவ உள்ளக வளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இராணுவ படையணிகளுக்கு இடையிலான உள்ளக படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி – 2025 நவம்பர் 7 அன்று பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் வென்று நாட்டிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் மிகுந்த பெருமையை அளித்த இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார்.
2025 ஆண்டு நடைபெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் குழு 2025 ஒக்டோபர் 28 ஆம் திகதி நாடு திரும்பியது.
இந்தியாவின் ராஞ்சியில் 2025 ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெற்ற 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வென்று நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இராணுவ ஸ்குவாஷ் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுகு இடையிலான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025, மத்தேகொடை இராணுவ முகாமில் 11 படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 185 ஆண் மற்றும் பெண் வீரர்களின் பங்கேற்புடன் 2025 ஒக்டோபர் 05 முதல் 15 வரை நடைபெற்றது.
இந்தியா ரஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 முதல் 25 வரை நடைபெறவிருக்கும் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிக்கு 59 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழுவை தேசிய விளையாட்டு தேர்வுக் குழு அங்கீகரித்துள்ளது.
இராணுவ சதுரங்கக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான சதுரங்க சாம்பியன்ஷிப் 2025, இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் 2025 செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் 14 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 135 வீர வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இலங்கை இராணுவத்தின் பரா தடகள வீரரான கோப்ரல் நுவான் இந்திக்க கமகே 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற உலக பரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்தார்.
2025 செப்டம்பர் 18 முதல் 22 வரை மாலைத்தீவில் நடைபெற்ற முதலாவது காமன்வெல்த் கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப்பில், இலங்கையின் ஆண்கள் கடற்கரை கரப்பந்து அணி, இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது.