இலங்கை இராணுவ டேக்வாண்டோ குழு 2025 ஆகஸ்ட் 20 முதல் 21 வரை பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாள் பட்டறையை நடாத்தியது.
தேசத்தின் பாதுகாவலர்
இலங்கை இராணுவ டேக்வாண்டோ குழு 2025 ஆகஸ்ட் 20 முதல் 21 வரை பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாள் பட்டறையை நடாத்தியது.
இராணுவ சைக்கிள் ஓட்டுனர் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான சைக்கிள் ஓட்ட சாம்பியன்ஷிப் - 2025, உடவலவேயில் 2025 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் 118 ஆண் மற்றும் பெண் சைக்கிள் ஓட்டுனர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
புகழ்பெற்ற 400 மீட்டர் தேசிய சாம்பியனான இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணிநிலை சாஜன் ஆர். நதீஷா, ஜப்பான் டோக்கியோவில் 2025 செப்டம்பர் 13 முதல் 21 வரை நடைபெற உள்ள உலக தடகள சம்மேளனத்தின் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மதிப்புமிக்க உலகளாவிய போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இலங்கை பெண் தடகள வீராங்கனை இவர் ஆவார்.
2025-08-28
இலங்கை இராணுவத்தின் முதலாவது படகுப் போட்டி மற்றும் கயாக்கிங் சாம்பியன்ஷிப், 2025 ஆகஸ்ட் 24 முதல் 26 வரை தியவன்னா படகுப் போட்டி கல்லூரியில், 08 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 85 வீரர்களின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது.
இலங்கை இராணுவ பளுதூக்கும் வீரர் சாஜன் வைடிஐ குமார அவர்கள் 2025 ஆகஸ்ட் 26 அன்று இந்தியாவில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
2025 ஆகஸ்ட் 22 அன்று தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி I எச்.எல்.என்.டி லெகம்கே 57.53 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
உலக செபக்டக்ரா சாம்பியன்ஷிப் 2025 தாய்லாந்தின் ஹாட் யாய் நகரில் 2025 மே 18 முதல் 26 வரை நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 16 முதல் தரவரிசையில் உள்ள நாடுகள் இதில் பங்கேற்றன. இலங்கை தேசிய செபக்டக்ரா அணி திறமையை வெளிப்படுத்தி, பின்வரும் பதக்கங்களை வென்றன:
60 வது இலங்கை இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025 ஆகஸ்ட் 20ஆம் திகதி தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் நிறைவுற்றது.
2025 ஆகஸ்ட் 18 முதல் 20 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 2025 இராணுவ தடகள சாம்பியன்ஷிப்பில், இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் இன்று (ஆகஸ்ட் 19, 2025) கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீட்டர் மற்றும் 18 சென்டிமீட்டர் உயரம் தாண்டி புதிய இலங்கை சாதனையைப் படைத்தார்.
இலங்கை தடகளக் குழு 103வது தேசிய தடகள சாம்பியன்ஷிப்பை 2025 ஆகஸ்ட் 02 முதல் 03 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஏற்பாடு செய்தது.