விளையாட்டு

13 வது பாதுகாப்பு சேவைகள் தடகள சாம்பியன்ஷிப் 2025 செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க விழாவில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.


2025 செப்டம்பர் 11 ஆம் திகதி சாலியபுர கஜபா சூப்பர் குரோஸ் பாதையில் நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள் மோட்டார் பந்தய சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவம் அனைத்திலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.


2025 ஆண்டுக்கான படையணிகளுக்கிடையிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2025 செப்டம்பர் 01, 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் பனாகொடை இராணுவ உள்ளக அரங்கில் நடைபெற்றது.


இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இடைநிலை குத்துச்சண்டை போட்டி - 2025, கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக மைதானத்தில் 2025 ஆகஸ்ட் 18 முதல் 21 வரை இடம்பெற்றது. இப்போட்டியில் 20 விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 85 ஆண் மற்றும் 36 பெண் விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்றனர்.


2025 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் (சிரேஷ்ட/ கனிஷ்ட/ இளைஞர்) 2025 ஆகஸ்ட் 24 முதல் 28 வரை இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த முன்னணி பளுதூக்குபவர்கள் பங்கேற்றனர்.


இலங்கை இராணுவ டேக்வாண்டோ குழு 2025 ஆகஸ்ட் 20 முதல் 21 வரை பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாள் பட்டறையை நடாத்தியது.


இராணுவ சைக்கிள் ஓட்டுனர் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான சைக்கிள் ஓட்ட சாம்பியன்ஷிப் - 2025, உடவலவேயில் 2025 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் 118 ஆண் மற்றும் பெண் சைக்கிள் ஓட்டுனர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.


புகழ்பெற்ற 400 மீட்டர் தேசிய சாம்பியனான இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணிநிலை சாஜன் ஆர். நதீஷா, ஜப்பான் டோக்கியோவில் 2025 செப்டம்பர் 13 முதல் 21 வரை நடைபெற உள்ள உலக தடகள சம்மேளனத்தின் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மதிப்புமிக்க உலகளாவிய போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இலங்கை பெண் தடகள வீராங்கனை இவர் ஆவார்.


இலங்கை இராணுவத்தின் முதலாவது படகுப் போட்டி மற்றும் கயாக்கிங் சாம்பியன்ஷிப், 2025 ஆகஸ்ட் 24 முதல் 26 வரை தியவன்னா படகுப் போட்டி கல்லூரியில், 08 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 85 வீரர்களின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது.


இலங்கை இராணுவ பளுதூக்கும் வீரர் சாஜன் வைடிஐ குமார அவர்கள் 2025 ஆகஸ்ட் 26 அன்று இந்தியாவில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.