விளையாட்டு

இந்தியா புதுதில்லியில் 2025 மார்ச் 12 அன்று நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டியில், உலகெங்கிலும் உள்ள சிறந்த பரா-தடகள வீரர்கள் பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்க ஒன்றிணைந்தனர்.


தேசிய தடகள தேர்வுப் போட்டி - 2025, தியகம மைதானத்தில் 2025 மார்ச் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்றது.


இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவரது சிறந்த செயல்திறன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், இது இலங்கையின் பரா-தடகள வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2025 இல் இலங்கை இராணுவம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, திறந்த ஆண்கள் சாம்பியன்ஷிப் உட்பட பல வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தப் போட்டி 2025 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 02 வரை நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரையில் நடைபெற்றது. இப் போட்டியில் நாடுமுழுவதிலிருந்தும் 160 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


இலங்கை தேசிய செபக்டக்ரா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024 ஆம் ஆண்டு தேசிய கடற்கரை செபக்டக்ரா சாம்பியன்ஷி போட்டி 2025 ஜனவரி 19 அன்று கல்கிசை கடற்கரையில் நிறைவடைந்தது. இலங்கை இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் செபக்டக்ரா அணிகள் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் வெற்றி பெற்றன.


யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், 52 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், 521 வது காலாட் பிரிகேட், பொதுமக்கள் மற்றும் இராணுவ சமூகங்களுக்கு இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்தும் அதே வேளையில் இளைஞர்களிடையே நல்லெண்ணம், ஒற்றுமை மற்றும் விளையாட்டுத் திறனை வளர்க்கும் நோக்கில் ஒரு காற்பந்து போட்டியை ஏற்பாடு செய்தது.


இராணுவ படையணிகளுக்கு இடையிலான கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி 2025 ஜனவரி 15, அன்று நுவரெலியா கோல்ப் கழகத்தில் நிறைவடைந்தது. இரண்டு நாட்களில், 12 வெவ்வேறு படையணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் அபார திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தினர்.


13 வது பாதுகாப்பு சேவைகள் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025 ஜனவரி 09 ஆம் திகதி கொழும்பு 07, டொரிங்டன் சதுக்கத்தில் உள்ள தேசிய பளுதூக்குதல் நிலையத்தில் நிறைவடைந்தது.


இயந்திரவியல் காலாட் படையணியின் படையலகுகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி 29 டிசம்பர் 2024 அன்று இயந்திரவியல் காலாட் படையணியின் தலைமையகத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது.