இலங்கை இராணுவத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியிலுள்ள வட்டக்கச்சி, முருகானந்த முன்பள்ளிகளில் இரண்டு கட்டிட நிர்மான பணிகள் முழுமையாக்கப்பட்டு இம் மாதம் (12) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
54 ஆவது படைப் பிரிவின் 9 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இம் மாதம் (10) ஆம் திகதி தலைமையக வளாகத்தினுள் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.A.I.J பண்டார அவர்களது தலைமையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வானது இடம்பெற்றது.
மதிப்பிற்குரிய தேஹாவபிய சுசீம தேரர் அவர்களது அழைப்பையேற்று 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து புதன்கலையில் உள்ள சமாதி புத்த பிரதத்ம மாவத்தை எனும் பெயரிடப்பட்ட விகாரையின் நுழைவாயிலில் உள்ள பெயர்பலகையை திறந்து வைத்து அந்த வீதியை இம் மாதம் (23) ஆம் திகதி திறந்து வைத்தார்.
ஸ்ரீ பாத புனித தளத்தை தொடர்புபடுத்தும் நல்லதண்ணி வீதியானது,மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவாண் டி சில்வா அவர்களின் வழிகாட்டல் மற்றும் தலைமையின் கீழ் 12 அதிகாரிகள் உள்ளிட்ட 262 எண்ணிக்கையிளான இராணுவ படையினரால் கடந்த வெள்ளிக்கிழமையன்று (29) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இல 306ஏ, 1 கொழும்பு 4 இல் அமைந்துள்ள லயன்ஸ் கழகம் மற்றும் 21 மற்றும் 213 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் புல்லேலிய பாடசாலை நூலகம் புதிதாக மீள் நிர்மானிக்கப்பட்டு மார்ச் மாதம் (30) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவிற்குட்பட்ட சன்முகரத்தினம் மகா வித்தியாலயம் மற்றும் கலவெட்டிதிடல் நாகேஸ்வரா வித்தியாலயம் மற்றும் கருக்கதீவு மகா வித்தியாலயம்...
கண்டி அம்பிட்டியே பிரேவெட்ஸ் கல்லுhரியின் 64 தலைமைத்துவ மாணவர்கள் இராணுவத் தளபதியவர்களுக்கு விடுத்த வேண்டுகோளிற்கமைய ஓருநாள் தலைமைத்துவப் பயிற்சிகள் இலங்கை இலங்கை ரைபல் படையணித் தலைமையகத்தில் கடந்த புதன் கிழமை (28) இடம் பெற்றது.
இந் அன்பளிப்பானது ஓய்வு பெற்ற மேஜர் அருணா பெரேரா மற்றும் அவருடைய நண்பர்களால் வழங்கப்பட்ட உதவியுடன், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் பாடசாலை உபகரணங்கள் உள்ளடக்கிய அன்பளிப்புகள் குமுதுபுர முதன்மைப் பாடசாலை மற்றும் மெதிரிகிரியவில் அமைந்துள்ள பிபியாவ முதன்மை பள்ளியிற் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கடந்த (30) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மெதிரிகிரிய ஆரம்ப பாடசாலையில் வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
51 ஆவது படைப் பரிவின் கீழ் இயங்கும் 513 ஆவது படைப் பிரிவின் படையினர்களால் கடந்த (07) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மற்றும் (08) ஆம் திகதி சனிக் கிழமை பொதுமக்களின் நலன் கருதி வட்டுக்கோட்டை மருத்துவமனை மற்றும் காரைநகர் சுப்ரமணியம் கல்லூரியில் மொபைல் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன.