Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

பயிற்சி

1949 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டதுடன் இராணுவத்திற்காக அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதனால் அவர்களுக்கு பயிற்சியளிக்கும் தேவைப்பாடு ஏற்பட்டதுடன் அந்த தேவையினை ப+ர்த்தி செய்யூம் வகையில் 1950 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06 ஆந் திகதி முதல் இராணுவ வீரர்களைப் பயிற்சியளிப்பதற்காக பயிற்சி நிறுவனமொன்று தியதலாவையில் நிறுவப்பட்டது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவ பயிற்சி நிறுவனத்தில் இருந்து முதற் கட்டமாக பயிற்சிகளை முடித்துக் கொண்ட பயிலுநர்களின்; பிரியாவிடை அணிவகுப்பு 1950 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 02 ஆந் திகதி நடைபெற்றது. இதில் 114 பயிலுநர்கள் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெள்யேறினார்கள். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இராணுவப் பயிற்சி நிறுவனம் பின்னர் இராணுவப் பயிற்சி மத்திய நிலையமாக பெயரிடப்பட்டது.

இராணுவப் பயிற்சி மத்திய நிலையத்தினுள் இராணுவத்தினருக்காக அவசியப்படும் இராணுவ வீரர்களுக்கான பயிற்சி அளிப்பு வழங்கப்பட்டாலும் கெடட் (படைப் பயிற்சி மாணவர்கள்) அதிகாரிகளைப் பயிற்சியளிப்பதற்கு தேவைப்படுகின்ற வசதிகள் போதுமான அளவூ காணப்படாமையின் காரணமாக கெடட் அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக வேண்டி ஐக்கிய இராச்சியத்தின் இராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது (சுஆயூ). இலங்கை இராணுவத்திற்காக முதற் தடவையாக கெடட் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டது 1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதியன்றாகும்இ இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்ட கெடட் அதிகாரிகளின் பயிற்சி நடவடிக்கைகளுக்காக ஐக்கிய இராச்சியத்தின் இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஐக்கிய இராச்சியத்தின் இராணுவக் கல்லூரிக்கு மேலதிகமாகஇ கெடட் அதிகாரிகளைப் பயிற்றுவித்தல் நடவடிக்கை இந்திய இராணுவக் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவக் கல்லூரிகளின் மூலமும் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தின் செயற்திட்டத்துடன் கெடட் அதிகாரிகள் வெளிநாடுகளில் பயிற்சியளிப்பது போதுமானதாகக் காணப்படாமைனால் இலங்கையினுள்ளே அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்காக தேவைப்படும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடுஇ அத்திட்டத்தின் பெறுபேராக 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆந் திகதி இலங்கையின் இராணுவ வரலாற்றில் முதற் தடவையாக கெடற் அதிகாரிகளுக்கான பயிற்றுவிப்பு இராணுவப் பயிற்சி மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் கெடற் அதிகாரிகளுகான உள்நாட்டு பயிற்சியளிப்பினை வெற்றிகரமாக நிறைவூ செய்துள்ளதுடன் பயிற்சியின் பின்னர் அவர்கள் அதிகாரிகளாக இராணுவ சேவையில் இணைத்தும் கொள்ளப்பட்டார்கள்.

இராணுவத்தினரின் செயற்திட்டத்துடன் பயிலுநர் படை வீரர்களுக்கான பயிற்றுவிப்பின் தேவை மிகவூம் விரைவாக விருத்தியடைந்ததுடன் அதன் காரணமாக படையணி மட்டத்தில் பயிலுநர்களைப் பயிற்றுவிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு படையணியினாலும் தங்களுக்கு அவசியப்படும் பயிலுநர்களைப் பயிற்றுவிக்கும் செயற்பாட்டினை ஆரம்பம் செய்ததோடு இராணுவப் பயிற்சி மத்திய நிலையம் இராணுவப் பயிற்சிக் கல்லூரியாக பெயரிடப்பட்டது. இராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு அவசியப்படும் கெடற் அதிகாரிகளைப் பயிற்சியளிப்பதற்காக மாத்திரம் அது ஒதுக்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இராணுவப் பயிற்சிக் கல்லூரியினுள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் கெடற் அதிகாரிகள் 500 - 600 வரையான அளவினர்கள் 02 வருட பயிற்சிக் காலத்திற்காக ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றார்கள் என்பதோடுஇ அங்கு இராணுவ அதிகாரி ஒருவருக்கு அவசியப்படும் தலைமைத்துவப் பயிற்சிஇ ஆயூதப் பயிற்சிஇ இராணுவத் தந்திரோபாயங்கள்இ இராணுவச் சட்டங்கள்இ இராணுவக் கணக்குகள் மற்றும் துறை சார்ந்த ஆய்வூகள் தொடர்பான பயிற்றுவிப்பு இங்கு வழங்கப்படுகின்றது. மேலும் கெடற் அதிகாரிகளின் ஆங்கில மொழி தொடர்பான அறிவினை விருத்தி செய்வதற்காக பயிற்றுவிப்பும் 06 மாத கால எல்லையில் ஆங்கிலப் பாடம் தொடர்பான கற்கையூம் இங்கு இடம்பெறுகின்றது. இராணுவ பயிற்சி மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி வர்ணங்கள் மற்றும் இராணுவப் பயிற்சி மத்திய நிலையத்தின் வர்ணங்கள் விருது வழங்கும் நிகழ்வூ 1972 ஆம் ஆண்டு இடம்பெற்றதோடு பின்னர் 1997 ஜூன் மாதம் 21 ஆந் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மேன்மைதகு ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களினால் மீண்டும் மற்றொரு முறை இராணுவப் பயிற்சி மத்திய நிலைய வர்ணங்கள் இராணுவப் பயிற்சிக் கல்லூரி வர்ணங்களாக விருதுகளை வழங்கியது.

தாய் நாட்டின் ஒற்றுமைஇ சுய தீர்மானங்கள் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டினைப் பேணிச் செல்வது இலங்கை இராணுவத்தின் தலைமையான பொறுப்பாகக் காணப்படுவதோடுஇ அதற்கு எதிராக ஏற்படும் எந்தவொரு சந்தர்ப்பத்தின் போதும் யூத்த செயற்பாடொன்றின் மூலம் அல்லது நாட்டின் சமாதானம் மற்றும் சமத்துவத்தினை ஏற்படுத்துவது இராணுவத்தினரின் தனித்தன்மை வாய்நத பொறுப்பாகும். இக் கடமையினை நிறைவேற்றுவதற்காக இராணுவத்தினரிடம் சரியான நோக்கம் மற்றும் நடைமுறை ஒழுங்குவிதியொன்று இருத்தல் வேண்டும். இலங்கை இராணுவத்திடம் காணப்படும் தாக்குதல் வலிமைஇ உடனடியாக செயற்படுதல் மற்றும் பணியமர்த்தலின்; பலம் முப்படைகளுடன் சிறந்த தொடர்புடன் கூடிய செயற்பாடுகளுக்காக பங்கேற்பதன் மூலம் எதிரியினுள் பயம் மற்றும் திகிலினை ஏற்படுத்துவதற்கு இராணுவத்தினர் முற்பட்டுள்ளார்கள். மேலும் இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் யூத்த களத்திற்குச் செல்வதற்கு முன்னர் சரியாக பயிற்சியளிப்பதன் மூலம் யூத்த களத்தில் வெற்றியடைதல் மற்றும் உயிர் ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்கு முடியூமாக இருப்பதோடு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வெற்றித்தன்மை பற்றி கருத்திற் கொள்ளும் போது அது உறுதிப்படுத்தப்படுகின்றது.

இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்களுக்காக அவசியப்படும் கோட்பாடுகள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை மிக உயர் நிலையில் நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவைப்படும் பின்னணி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்முறைப் பயிற்சிகளின் மூலம் எதிரியின் செயற்பாடுகளை மிகவூம் சரியான முறையில் அடக்குவதற்கு முடியூமாக இருப்பதோடு அனைத்து கட்டளைத் தளபதிகளும் தமக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் படை வீரர்களை நவீன தொழில்நுட்ப முறைமைகளைப் பயன்படுத்தி அவர்களின் போர்த் தந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை விருத்தி செய்தல் வேண்டும்.

இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்களுக்காக அவசியப்படும் கோட்பாடுகள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை மிக உயர் நிலையில் நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவைப்படும் பின்னணி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்முறைப் பயிற்சிகளின் மூலம் எதிரியின் செயற்பாடுகளை மிகவூம் சரியான முறையில் அடக்குவதற்கு முடியூமாக இருப்பதோடு அனைத்து கட்டளைத் தளபதிகளும் தமக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் படை வீரர்களை நவீன தொழில்நுட்ப முறைமைகளைப் பயன்படுத்தி அவர்களின் போர்த் தந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை விருத்தி செய்தல் வேண்டும்.

இன்று சகல படையணிகள் மற்றும் படைப் பிரிவூகளுக்காக பயிற்சிப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடுஇ அப்பயிற்சிப் பாடசாலைகளின் மூலம் ஒவ்வொரு படையணிகளுக்கும் அவசியப்படும் பயிலுநர்களை உடனடியாகப் பயிற்றுவிக்கும் செயற்பாடு இடம்பெறுகின்றது. மேலும் இலங்கையில் இராணுவத்தினரில் குறிப்பிடத்தக்க அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளை வகிப்பவர்கள் வருடாந்தம் தங்களது படையணிகள் ஃ படைப் பிரிவூக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த விசேட பயிற்சித் தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புதல் தற்போது இடம்பெற்று வருகின்றது. இலங்கை இராணுவத்தின் பயிற்சிப் பாடசாலைகள் மற்றும் மத்திய நிலையங்கள் பின்வருமாறு காணப்படுகின்றது;

பயிற்சி நிலையங்கள்

Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot