இலங்கை இராணுவம் லங்கா சவாரி 2026 ஆரம்பம்
2026-01-19
இலங்கையின் முதன்மையான பல-கட்ட சைக்கிள் ஓட்டுதல் சுற்று போட்டியான லங்கா சவாரி 2026 இன் முதல் நிகழ்வு 2026 ஜனவரி 18 அன்று நிறைவுபெற்றது.
தேசத்தின் பாதுகாவலர்
2026-01-19
இலங்கையின் முதன்மையான பல-கட்ட சைக்கிள் ஓட்டுதல் சுற்று போட்டியான லங்கா சவாரி 2026 இன் முதல் நிகழ்வு 2026 ஜனவரி 18 அன்று நிறைவுபெற்றது.
13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இலங்கை இராணுவம் பெற்றது. இலங்கை இராணுவத்தால் நடாத்தப்பட்ட இப்போட்டி 2024 செப்டெம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் இரண்டு வருட காலப்பகுதியில் 39 விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியது.
இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி, அவரது துணைவியார் திருமதி சுனிதா திவேதி அவர்களுடன் இணைந்து 2026 ஜனவரி 06 ஆம் திகதி தொடங்கிய இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டார். இந்த விஜயம், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக காணப்பட்டது.
இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள், தனது துணைவியார் திருமதி சுனிதா திவேதி அவர்களுடன் இணைந்து, 2026 ஜனவரி 08 அன்று இராணுவப் போர் கல்லூரிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயம் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு மற்றும் தொழில்முறை இராணுவ பயிற்சியை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள் 2026 ஜனவரி 06 ஆம் திகதி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
2026-01-07
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள் தனது துணைவியர் திருமதி சுனிதா திவேதி அவர்களுடன் 2026 ஜனவரி 06 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து நிலையினருடன் இணைந்து இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் நிறுவப்பட்ட ‘இலங்கையை மீள் கட்டியெழுப்பும்’ நிதிக்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து அதிகாரிகளும் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் பணி நாள் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது.
தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 100 வது விடுகை அணிவகுப்பு நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி 2025 டிசம்பர் 21 அன்று 240 பயிலிளவல் அதிகாரிகளை பரிசளித்து இலங்கை அன்னையை கௌரவித்தது.