பட விவரணம்

தேசிய மாணவ சிப்பாய் படையணி, கல்வி அமைச்சுடன் இணைந்து, அகில இலங்கை மாணவ சிப்பாய் கீழைதேய பேண்ட் வாத்திய சவால் கிண்ணம் – 2025 ஐ 2025 செப்டம்பர் 25 அன்று ரன்டெம்பே தேசிய மாணவ சிப்பாய் படையணி பயிற்சி மையத்தில் நடத்தியது.


இந்திய கடற்படை பதவிநிலை பிரதானி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பீவீஎஸ்எம் எவீஎஸ்எம் என்எம் சீஎன்எஸ், இந்திய கடற்படைத் தலைவர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் - இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், சீஎன்எஸ் இன் எஸ்ஒ கெப்டன் அஸ்வானி கே ஹான்ஸ், சீஎன்எஸ் இன் என்எ கெப்டன் ஆதித் பத்நாயக், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்எம் மற்றும் கொமாண்டர் நிதின் பாபு (சீடிஆர் –எப்சீ) ஆகியோர் அடங்கிய குழுவுடன், 2025 செப்டெம்பர் 22, அன்று இராணுவத் தலைமையகத்தில் தளபதி...


புதிய பொலிஸ்மா அதிபர் திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025 செப்டெம்பர் 12 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


இராணுவ வழங்கல் பாடசாலை, "எதிர்கால வழங்கல் நிலையமாக திருகோணமலையின் சாத்தியக்கூறுகள்: ஆற்றல், தகவமைப்பு, நிலைத்தன்மை, உகந்த பயன்பாடு மற்றும் பிரச்சினைகள்" என்ற கருப்பொருளின் கீழ், 2025 செப்டம்பர் 10 அன்று இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்த வழங்கல் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.


27 வது வருடாந்த இந்து-பசிபிக் பாதுகாப்புத் தலைவர்கள் மாநாடு - 2025, தாய்லாந்தில் 2025 ஆகஸ்ட் 25 முதல் 28 வரை நடைபெற்றது. இதில் 29 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்கள் பங்கேற்றனர். இலங்கையிலிருந்து சீருடை அணிந்த பாதுகாப்புத் தலைமை பிரதிநிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.


குருநாகல், பாங்கொல்ல அபிமன்சல-3 மற்றும் அனுராதபுரம் அபிமன்சல-1 ஆகிய மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலவிடுதிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்கள் கடந்த ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயம் பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி மற்றும், மாற்றுத்திறனாளி போர்வீரர்களின் நல்வாழ்வுக்கான அதன் நீடித்த அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்தது.


ஜெனரல் தேசமான்ய டெனிஸ் பெரேரா அவர்களின் 11வது நினைவு பேருரை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டகற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் 2025 ஆகஸ்ட் 11 அன்று நடைபெற்றது.


இலங்கை இராணுவம், தூய இலங்கை பணிக்குழுவுடன் இணைந்து, 2025 ஜூலை 29 ஆம் திகதி "இராணுவத்துடன் சுத்தமான சுற்றுச்சூழல் - தேசத்திற்கு சுத்தமான கடற்கரை" என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை தொடங்கியது. மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பிரதேசத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின் தொடக்க விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.


பாகிஸ்தான் இராணுவத்தின் பொது பணிநிலை பிரதானி லெப்டினன் ஜெனரல் சையத் ஆமர் ராசா அவர்கள் உயர்மட்ட இராணுவக் குழுவுடன் 2025 ஜூலை 22 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூலை 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.