இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 16 டிசம்பர் 2024 அன்று தாமரை தாடக திரையரங்கில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி எண்-19 இன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
பட விவரணம்
தற்போது நிலவும் சீரற்ற வானிலை நிலைமைகளுக்கு தேசிய அளவிலான மீட்பு நடவடிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று இரவு இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.
81 வது ஆயுதப் படைகளின் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின விழா இன்று (நவம்பர் 16) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர் நினைவுத்தூபியில் நடைபெற்றது. இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கம் ஆயுதப்படைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த வருடாந்த நிகழ்வு, முதலாம் உலகப் போர் முதல் இன்று வரையிலான யுத்தங்களில் தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இலங்கை போர் வீரர்களின் நினைவு மற்றும் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் நடாத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பு கல்லூரியால் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, 2025 நவம்பர் 05, அன்று "தேசிய பாதுகாப்பில் இலங்கை இராணுவத்தின் பங்கு" என்ற கருப்பொருளில் தளபதியின் சொற்பொழிவை நிகழ்த்த அழைக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் படை பங்களிப்பு நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடு 2025, இந்தியா புதுதில்லியில் 2025 ஒக்டோபர் 14 முதல் 16 ஆம் திகதி வரை இந்தியா இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), அவர்கள் இலங்கை இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சியங்களுக்கு இரண்டு நாள் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்கள் 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். 76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தலைமையகத்திற்கு வந்த பிரதி அமைச்சரை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.
தேசிய மாணவ சிப்பாய் படையணி, கல்வி அமைச்சுடன் இணைந்து, அகில இலங்கை மாணவ சிப்பாய் கீழைதேய பேண்ட் வாத்திய சவால் கிண்ணம் – 2025 ஐ 2025 செப்டம்பர் 25 அன்று ரன்டெம்பே தேசிய மாணவ சிப்பாய் படையணி பயிற்சி மையத்தில் நடத்தியது.
இந்திய கடற்படை பதவிநிலை பிரதானி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பீவீஎஸ்எம் எவீஎஸ்எம் என்எம் சீஎன்எஸ், இந்திய கடற்படைத் தலைவர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் - இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், சீஎன்எஸ் இன் எஸ்ஒ கெப்டன் அஸ்வானி கே ஹான்ஸ், சீஎன்எஸ் இன் என்எ கெப்டன் ஆதித் பத்நாயக், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்எம் மற்றும் கொமாண்டர் நிதின் பாபு (சீடிஆர் –எப்சீ) ஆகியோர் அடங்கிய குழுவுடன், 2025 செப்டெம்பர் 22, அன்று இராணுவத் தலைமையகத்தில் தளபதி...
புதிய பொலிஸ்மா அதிபர் திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025 செப்டெம்பர் 12 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.