செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கை பொறியியல் படையணிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி – 2026, தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் 2026 மார்ச் 08 ஆம் திகதி நடைபெற்றது. நிறைவு விழாவில் இராணுவத் பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் கம்புருபிட்டிய 12 வது (தொண்டர்) பொறியியல் சேவைகள் படையணி மற்றும் மாத்தறை 3 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றிற்கு 2026 மார்ச் 06 ஆம் திகதி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.


புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் வை.எச்.பீ. ரங்கஜீவ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 2026 மார்ச் 09 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னம் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.


தொடர்ச்சியாக 59 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த 'இராணுவ வீதி ஓட்டம்' ஞாயிற்றுக்கிழமை (2026 மார்ச் 08) காலை இராணுவத் தலைமையக நுழைவாயிலில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது.


இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1999 ஒக்டோபர் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட இராணுவ கீதத்தின் இசையமைப்பாளர்களைக் கௌரவிப்பதற்காக இலங்கை இராணுவம், 2026 மார்ச் 6 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.


மேஜர் ஜெனரல் கே.என்.டி. கருணபால ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 36 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 04 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 4வது முகாமைத்துவ குழுக் கூட்டம் 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்த அமர்விற்கு இராணுவ பதவி நிலை பிரதானியும் குழு தலைவருமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தலைமை தாங்கினார்.


இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 15,18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் இலங்கை பொறியியல் படையணியின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு தொடர்ச்சியான உத்தியோகப்பூர்வ விஜயங்களை மேற்கொண்டார்.


தர உத்தரவாதம் மற்றும் பரிசோதனை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எல்.எஸ்.டி.என். பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள், 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 03 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இராணுவப் போர் கல்லூரி தனது 3வது நிர்வாகக் குழு கூட்டத்தை 2026 பெப்ரவரி 25 ஆம் திகதி புத்தல வளாகத்தில் கூட்டியது. இந்தக் கூட்டத்திற்கு இலங்கை இராணுவத்தின் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இந்தக் கூட்டம், உட்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளை நவீனமயமாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மேம்பட்ட செயல்பாட்டுத் திறனுக்கு வழி வகுத்தது.