செய்தி சிறப்பம்சங்கள்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதியும், இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.என். மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் தலைமையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. இதில் இராணுவம், பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் நிலவும் சீரற்ற வானிலை நிலைமையை மதிப்பிடுவதற்காக களத் தளபதிகளுடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை ஏற்படுத்தி, நடந்து வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நெறிப்படுத்தவும் தேவையான வழிகாட்டுதல்களை இன்று மாலை இராணுவத் தலைமையகத்தில் வழங்கினார்.


வெள்ளம்பிட்டிய ராஜசிங்க கல்லூரியில் நிறுவப்பட்ட அவசர பாதுகாப்பு நிலையத்திற்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 நவம்பர் 29 ஆம் திகதி விஜயம் செய்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை பார்வையிட்டதுடன், அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரண பணிகளை மதிப்பாய்வு செய்தார்.


கெமுனு ஹேவா படையணியின் மறைந்த பிரிகேடியர் டபிள்யூ.வீ.எஸ். பொதேஜு ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ (ஓய்வு) அவர்களுக்கான இராணுவத்தின் இறுதி மரியாதை 2025 நவம்பர் 27 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.


2025 நவம்பர் 27 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அரசாங்க அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணவும், தொடர்ந்து நடைபெறும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இருப்பதை உறுதி செய்யவும், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து மட்டங்களிலும் உள்ள தளபதிகளுக்கு அறிவுறுத்தினார்.


உற்பத்தித்திறன் மற்றும் செயல்முறை மேம்பாட்டு பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 நவம்பர் 25 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.


இந்திய மற்றும் இலங்கை படையினருக்கிடையிலான பரஸ்பர கலாசார பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய முப்படைகளைச் சேர்ந்த 120 பேர் கொண்ட குழுவினர் 2025 நவம்பர் 26 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. 2025 நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள இரண்டு நாள் விஜயம், இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல், கலாசார புரிதலை ஆழப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீஎஸ்கே பெரேரா ஆர்எஸ்பீ என்டிசீ மற்றும் மேஜர் ஜெனரல் என்எஸ்எஸ் டயஸ் ஆர்எஸ்பீ ஆகியோர், 2025 நவம்பர் 26, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.


2025 நவம்பர் 26 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் சமீபத்திய ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தின் பின்னர் மியன்மாரில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவக் குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.