செய்தி சிறப்பம்சங்கள்

அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.டி.யூ. கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2026 மார்ச் 23ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னம் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.


விசேட படையணியின் அடிப்படைப் பாடநெறி எண் – 57 இன் விடுகை நிகழ்வானது 2026 மார்ச் 20 அன்று மாதுரு ஓயா விசேட படையணி பயிற்சி பாடசாலையில் நிறைவு பெற்றது. இப் பாடநெறியில் 5 அதிகாரிகள் மற்றும் 59 சிப்பாய்கள் தீவிர ஒன்பது மாத அடிப்படைப் பயிற்சியினை பெற்றனர்.


கொழும்பு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர், ஹோர்டன் சமவெளிப் பகுதியில் உள்ள ‘உலக முடிவு’ என்ற இடத்திலிருந்து தவறி விழுந்தது குறித்து நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் பொலிஸ் அத்தியட்சகரிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இலங்கை இராணுவ படையினர் 2026 மார்ச் 19 அன்று உடனடியாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.


மேஜர் ஜெனரல் சீஎஸ் திப்பொட்டுகே அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர், இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 17 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் கருத்திற்கிணங்க டிஜிட்டல் கற்றலுக்கான மேம்படுத்தப்பட்ட அணுகல் மூலம், இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களின்...


தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையில் பணியாற்ற இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் 12வது குழு 2026 மார்ச் 13 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது.


இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியினால் இரண்டு நாள் தலைமைத்துவ மேம்பாட்டு பட்டறை 2026 மார்ச் 06 மற்றும் 07 ம் திகதிகளில் சீன-லங்கா நட்புறவு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரிகள், பயிலிளவல் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் தலைமைத்துவ தரநிலைகள், தொழில்முறை பொறுப்பு மற்றும் வழிகாட்டுதல் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


தென் சூடான் போரில் ஐ.நா அமைதி காக்கும் பணியின் இலங்கை இராணுவ வைத்திய படை நிலை-2 வைத்தியசாலையில் பணியாற்றிய 11வது குழுவில் 10 அதிகாரிகள் மற்றும் 41 சிப்பாய்கள் உள்ளடங்குவர்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மார்ச் 11 கொழும்பு 07,கிராண்ட் மிட்லேண்டில் நடைபெற்ற விசேட இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டார். புனித ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு நோன்பதனை குறிக்கும் வகையில் இந்த விழா அமையப்பட்டது.


அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.பீ. ஜயம்பதி யூஎஸ்பீ அவர்கள் 2026 மார்ச் 11ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னம் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.