செய்தி சிறப்பம்சங்கள்

‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற வவுச்சர் வழங்கும் நிகழ்ச்சியில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார். இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.எம்.சி. ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டம் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.


எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, 2026 ஏப்ரல் 08 அன்று அனுராதபுரம் அபிமன்சல-1 நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.


மேஜர் ஜெனரல் கே.பீ.பீ. கருணநாயக்க அவர்கள், 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 ஏப்ரல் 07 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 ஏப்ரல் 06 அன்று பட்டகொடெவில் இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு புதிதாகக் கட்டப்பட்ட இல்லத்தைத் திறந்து வைத்தார்.


இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இராணுவத்தில் மூன்றாவது மிக உயர்ந்த பதவியான இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக 2026 ஏப்ரல் 06 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.


கஜபா படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 62 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கொஸ்கம தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 61வது தளபதியாக தனது பதவிக்காலத்தை 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி நிறைவு செய்தார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அத்திடிய மிஹிந்து செத் மெதுர மற்றும் பங்கொல்ல அபிமன்சல 3 ஆகிய இடங்களுக்கு 2026 ஏப்ரல் 03 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படும், இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக பதவியேற்றார்.


மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 ஏப்ரல் 02 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெறுவதற்காக இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.