செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கையில் உள்ள ஐக்கிய இராச்சிய தூதரகத்தில், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான நியமிக்கப்பட்ட புதிய பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் கீத் மைல்ஸ் அவர்கள் 2025 ஆகஸ்ட் 14 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களுடன் கம்புருப்பிட்டிய இராணுவ மாற்றுத்திறனாளி போர்வீரர்கள் பராமரிப்பு நல விடுதியான அம்பிமன்சல - II ஐ பார்வையிட்டதுடன் அங்கு வசிக்கும் போர்வீரர்களின நல்வாழ்வைப் பற்றி விசாரித்தார்.


பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் பிரதம கள பொறியியலாளர் பிரிகேடியர் சீ.டி விக்ரமநாயக்க டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் வெற்றிகரமாக நிறைவடைந்தது.


இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகம் 2025 ஆகஸ்ட் 12 அன்று இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் பிள்ளைகளான அரசு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதற்காக ஒரு சிறப்பு நன்கொடை திட்டத்தை நடத்தியது.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் தொழிற்சாலைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை தடகளக் குழு 103வது தேசிய தடகள சாம்பியன்ஷிப்பை 2025 ஆகஸ்ட் 02 முதல் 03 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஏற்பாடு செய்தது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஓகஸ்ட் 06 ஆம் திகதி பனாகொடை இராணுவ உடற்பயிற்சி பாடசாலையில் மாற்றுத்திறனாளி வீரர்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்தார். இந்த நிகழ்ச்சி முன்னாள் போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைப்பெற்றது.


இராணுவ வீரர்களிடையே தலைமைத்துவத் திறன் முடிவு எடுபதில் மனித திறன்களை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, 'மனித காரணி' குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு 2025 ஆகஸ்ட் 01 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வு இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் ஜெனரல் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.


இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 13வது பாதுகாப்பு சேவைகள் கராத்தே போட்டி 2025 ஓகஸ்ட் 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் பனாகொடை இராணுவ உடற்கல்வி பயிற்சி பாடசாலை உள்ளக அரங்கில் நடைபெற்றது.


இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரியில் 2025 க்கான பட்டபடிப்புக்கான விருது வழங்கும் நிகழ்வு - 2025 ஓகஸ்ட் 05 அன்று தியதலாவை சினோ-லங்கா கேட்போர்கூடத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.