‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற வவுச்சர் வழங்கும் நிகழ்ச்சியில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார். இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.எம்.சி. ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டம் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.