செய்தி சிறப்பம்சங்கள்

மேஜர் ஜெனரல் கே.என்.டி. கருணபால ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 36 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 04 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 4வது முகாமைத்துவ குழுக் கூட்டம் 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்த அமர்விற்கு இராணுவ பதவி நிலை பிரதானியும் குழு தலைவருமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தலைமை தாங்கினார்.


இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 15,18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் இலங்கை பொறியியல் படையணியின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு தொடர்ச்சியான உத்தியோகப்பூர்வ விஜயங்களை மேற்கொண்டார்.


தர உத்தரவாதம் மற்றும் பரிசோதனை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எல்.எஸ்.டி.என். பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள், 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 03 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இராணுவப் போர் கல்லூரி தனது 3வது நிர்வாகக் குழு கூட்டத்தை 2026 பெப்ரவரி 25 ஆம் திகதி புத்தல வளாகத்தில் கூட்டியது. இந்தக் கூட்டத்திற்கு இலங்கை இராணுவத்தின் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இந்தக் கூட்டம், உட்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளை நவீனமயமாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மேம்பட்ட செயல்பாட்டுத் திறனுக்கு வழி வகுத்தது.


சர்வதேச இராணுவ சாகச சவால் கிண்ணம் 2026, இந்தியா அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பியர்ஹெட் சாகச கிராமத்தில் 2026 பெப்ரவரி 12 முதல் 25 வரை நடைபெற்றது. இதில் எட்டு நாடுகளைச் சேர்ந்த பன்னிரண்டு அணிகள் பங்கேற்றன.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 24 அன்று களனிமுல்லை 2வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் கட்டுநாயக்க 2வது இலங்கை இராணுவ சேவைப் படையணி ஆகியவற்றிற்கு விஜயம் செய்தார்.


இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், இராணுவ சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து, 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில், தொடர்ச்சியான நலன்புரி திட்டங்களின் ஒரு பகுதியாக, ஊனமுற்ற ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கான மருத்துவ முகாமை நடாத்தியது. திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் இராணுவ வீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் 2026 பெப்ரவரி 23 ஆம் திகதி நடைபெற்ற ‘மாஸ்டர் மைண்ட்ஸ் போட்டி - 2026’ தொடக்க விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.